வட பிராந்தியத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு திறக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்வு, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவ கலாச்சார மையத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மிக பிரமாண்டமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர்,அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.