நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (6) சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலங்கள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆழ்கடலில் அபாயகரமான ஔடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன.
இதற்கு அமைய நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமாகவும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமாகவும் நடைமுறைக்கு வருகின்றன.