சஹ்ரானே ​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பதையும், இது ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) கொள்கையினால் வழிநடத்தப்பட்ட ஒரு செயல் என்பதையும் அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) விசாரணைகள் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் உள்ள சிலர் தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட வேடிக்கையான விடயங்கள் என விமர்சித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்டதன் காரணமாக, அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, FBI அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான சத்தியக் கடதாசியானது, தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், தாக்குதல்தாரிகளின் தொலைபேசி தரவுகள், டிஜிட்டல் சாதனங்கள், வீடியோக்கள் மற்றும் பயிற்சி முறைகள் போன்ற ஆழமான மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அந்த அறிக்கையில், சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்தத் தாக்குதலின் பிரதான மூளையாகவும் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பது ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் “ISIS-Sri Lanka” என்ற பெயரில் ஒரு பயங்கரவாத அமைப்பு இயங்கியதையும், சஹ்ரான் ஹாஷிம் அதன் சுய-பிரகடனத் தலைவராக இருந்ததையும் அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த ஐ.எஸ் தலைமைத்துவத்துடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்ததோடு, அவர்களது அங்கீகாரத்தையும் பெற்றிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலுக்குத் தேவையான தற்கொலை குண்டுகளைத் தயாரித்து, அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான ஒரு குழுவிற்கு, எந்தப் பள்ளியைத் தாக்க வேண்டும் என்று சுரேஷ் சலே தான் காட்டிக்கொடுத்தார் எனக் கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது என சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து ஐஎஸ் கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, ஒரு அமைப்பை உருவாக்கித் திட்டமிட்டவர்களுக்கு இலக்குகளைத் தீர்மானிக்கத் தெரியாது என்று கூறுவது முட்டாள்தனமானது எனத் தெரிவித்த அவர், இன்னும் சில நாட்களில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கண்டறியத் தெரியாமல் நாள்காட்டியைப் பார்த்துக் கொடுத்தது இன்னுமொருவர் என்று கூட இவர்கள் கூறக்கூடும் என எள்ளி நகையாடினார்.

இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளினால் சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தாம் இந்தத் தகவல்களை முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ranil-wickremesinghe

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

April 29, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை

whea

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

April 29, 2026

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை

sc

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு: இரண்டாம் நாள் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை!

April 29, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்