இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் படி, மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் அமைப்பு இயக்கங்களுக்காக ஆறு புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல உப பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்ட வர்த்தமானி வௌியாகியுள்ளது.