மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்காமல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமை செலுத்த முன்வர வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினையான வீட்டு வன்முறை காணப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும் வன்முறைகளையும் சகித்துக்கொண்டு முடங்கிப் போய்விடக் கூடாது. குறிப்பாக, 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஏனைய சட்டப் பிரிவுகள் குறித்தும் பெண்கள் போதிய விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தின் கீழ் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கென விசேட ஆலோசனை மையங்கள் 11 மாவட்டங்களில் நிறுவப்பட்டன. அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலும் ஒரு மையம் திறந்து வைக்கப்பட்டது. இவற்றின் மூலம் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனவள ஆலோசனை வழங்கப்படுவதோடு, சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

பல பெண்கள் தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதே தெரியாமல் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தயக்கமின்றி பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவை அணுகி சட்ட உதவியைப் பெற வேண்டும். ஒரு பெண் பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்கும் பலத்தைப் பெறும்போதுதான் அவரால் வன்முறைகளிலிருந்து விடுபட முடியும். இதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள், சிறு தொழில் முயற்சி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வாழ்வாதார உதவிகள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்படும் குறைந்த வட்டி வீதத்திலான கடன் வசதிகளைப் பெண்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த சிறு தொழில்களில் ஈடுபட்டுத் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பிரத்தியே திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சட்ட ரீதியான விழிப்புணர்வும் பொருளாதாரச் சுதந்திரமும் இணையும்போதுதான் பெண்களால் உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடாமல், பெண்களின் உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில