மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே – திலித் ஜயவீர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடக அரசியலுக்கு இனிமேலும் எதிர்காலம் இல்லை எனவும், மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே எனவும் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பு ஹென்றி பெத்ரிஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் மிகப்பெரிய செல்வம் அதன் மனித வளமாகும். ஒரு தொழில்முனைவோர் அரசு உழைக்கும் மக்களாலேயே கட்டியெழுப்பப்படுகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை மே தினத்தை ஒரு சோகமான பின்னணியிலேயே கொண்டாட வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இவ்வளவு தூரம் அரச அதிகாரத்தைப் பயன்படுத்திய வேறு எந்த அரசாங்கமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது. நிதியமைச்சை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மில்லியன் கணக்கான டொலர்கள் ஹெக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பின்னணியில், அதன் உண்மையை வெளிப்படுத்திய அரச அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் உழைக்கும் மக்களைத் துரத்தித் துரத்தித் தாக்கி வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்திய விதம் குறித்துப் பேசிய அவர், லெனின், மார்க்ஸ் அல்லது விஜேவீரவின் புகைப்படங்களைப் பயன்படுத்திப் பேரணிகளை நடத்த இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

உண்மையான இடதுசாரி இயக்கம் என்பது மக்களின் இதயத் துடிப்பு என்றும், அந்தத் தூய்மையான அரசியலை இவர்கள் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அநுர குமாரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை. 60,000 இளைஞர்களைப் பலிகொடுத்த கட்சி இது.

அந்த இளைஞர்களுக்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். இது அநுர குமாரவின் அரசாங்கம் அல்ல, அநுரவும் ரணிலும் இணைந்து உருவாக்கிய அரசாங்கமே நாட்டை நடத்துகிறது.

இந்தப் புத்தகம் ரணில் விக்கிரமசிங்கவின் உள்ளடக்கத்தைக் கொண்டது, அட்டை மாத்திரமே அநுரவுடையது என அவர் விமர்சித்தார்.

ஒரு வளர்ந்த இலங்கையை உருவாக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கவும் தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் நிச்சயமாக அதிகாரத்தைக் கைப்பற்றும். தாய்நாட்டின் மீது அன்பு கொண்ட மக்களை நிபந்தனையின்றி ஒன்றிணைப்போம்.

இந்த அரசாங்கத்தையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் சக்திகளையும் தோற்கடிப்போம் என திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.

Nisha

திறைசேரியின் உதவிப் பணிப்பாளர் ரங்கவின் உளவியல் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

May 2, 2026

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின்

tham

ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

May 2, 2026

தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள

Iranfo

மீண்டும் போர் தொடங்கும் – ஈரான் இராணுவம்

May 2, 2026

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த

Pikku

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தேரரிடம் வாக்குமூலம் பதிவு

May 2, 2026

அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்

jail

இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

May 2, 2026

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Indi

தலைமன்னார் – தனுஷ்கோடி; ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

May 2, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை

Bim

வடக்கில் உள்ள பிரச்சினைகளை வைத்தே இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றார்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

May 2, 2026

“வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல்

bi

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

May 2, 2026

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில்

Ranga n

இன்று உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியை

May 2, 2026

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில்

Arrest

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட மூவர் கைது!

May 2, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

colombo market

கொழும்பின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4% ஆக உயர்வு

May 2, 2026

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) படி, மார்ச் மாதத்தில் 2.2% ஆகக் காணப்பட்ட ஒட்டுமொத்த வருடாந்த பணவீக்க விகிதம்,

tou

சுற்றுலாத்துறை: வளர்ச்சியை மீட்டெடுக்க ஆசிய சந்தைகளை இலக்கு வைக்கும் இலங்கை

May 2, 2026

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகளாவிய ரீதியில் சவால்கள் நிலவிய போதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை பின்னடைவுகளைத் தாண்டி முன்னேறி வருவதாக