மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக WION சர்வதேச மாநாட்டில் (WION Global Summit) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் என்பது மோதல்களுக்கான வலயாக இல்லாமல், நாகரிகங்களை இணைக்கும் பாலமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தரின் போதனைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நாகரிக உறவின் தொடக்கமாகும்.

இன்று உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும், கொள்கலன் போக்குவரத்தில் பாதியும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இடம்பெறுகின்றன. உலகப் பொருளாதாரத்தின் டிஜிட்டல் உயிர்நாடிகளான கடலடித் தொடர்பாடல் கேபிள்கள் (Undersea cables) இந்தப் பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. எனவே, இந்த கடல்வழிப் பாதையில் ஏற்படும் பாதிப்பு முழு உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான கடல்சார் வர்த்தகப் பாதையின் மையத்தில் இலங்கை அமைந்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் செல்வாக்கு அதன் புவியியல் அமைவிடத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை; அதனை அந்த நாடு எவ்வளவு புத்திசாலித்தனமாக கையாள்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. சிறிய நாடுகள் தமது இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து நாடுகளுடனும் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவது அவசியமாகும்.

21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப எழுச்சி கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி இலங்கைக்குப் பாரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பாதுகாப்பான கடல் பாதைகளை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயற்படல்.

போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நிதி மையமாக இலங்கையை மேம்படுத்தல். குறிப்பாக, தெற்காசிய ‘பசுமை ஹைட்ரஜன்’ தாழ்வாரத்தை உருவாக்குதல்.

கடல்சார் ஆராய்ச்சி, நிலையான மீன்பிடித் தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க கடல் எரிசக்தி துறைகளில் ஒத்துழைத்தல்.

“இந்தியப் பெருங்கடல் ஸ்திரமாக இருந்தால், உலகப் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும். இந்த சமுத்திரம் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் வலயமாக இருப்பதை உறுதி செய்வது எமது தலைமுறையின் பொறுப்பாகும்” என அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்