மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ நூல் வெளியீடு

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்’ எனும் நூல் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச,அநுர பிரியதர்ஷன யாப்பா,சாகல ரத்நாயக்க, வஜிர அபேவரத்தன, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பௌத்த மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க ஆரம்ப உரையாற்றி ‘ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை ஏற்க முடியாது. ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறேன். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில தான் எழுதிய நூலை பௌத்த மத தலைவர்களுக்கு வழங்கி வைத்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கி வைத்தார். நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில, குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு தான் எழுதிய புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்றும், தாக்குதல்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் 300 மில்லியன் ரூபா செலவழித்ததாகவும் குறிப்பிட்டார்.

dailythanthi_2026-04-23_p6g756c0_hennai33

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத் தேர்தல்: 2011-ம் ஆண்டு சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும்

air canada157

எரிபொருள் தட்டுப்பாடு: கனடாவில் ரத்தாகும் விமானங்கள்; உயரும் பயணக் கட்டணங்கள்

April 23, 2026

ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக விமான எரிபொருள் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கனடா

_117337117_963b4151-687c-47fd-b0e9-e50e4faf5f6a.jpg

மாலை 5 மணிக்கே சாதனை! தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல் – 82.24% வாக்குப்பதிவு!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும்

Harshana-Suriyapperuma

திறைசேரி நிதி மாயம்: மின்னஞ்சல் ஊடாக ஊடுருவிய ஹேக்கர்கள் – நிதி அமைச்சின் செயலாளர் விளக்கம்

April 23, 2026

திறைசேரியிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர் நிதியில், முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக

kanamal

யாழில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நடாத்திய விசேட சந்திப்பு

April 23, 2026

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை

Mujibar Rahuman

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியை விசாரிக்க வேண்டும்!

April 23, 2026

சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு

warnig

மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

April 23, 2026

குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி

government

மொழிகளை பணிகளில் பயன்படுத்துவது குறித்த பின்தொடர் பொறிமுறை

April 23, 2026

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி

fue

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

April 23, 2026

இந்த வருடம், ஜூலை மாதம் இறுதி வரை தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக புதிய

he

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

April 23, 2026

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பிற காரணங்களினால் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

hur

அமெரிக்காவின் முற்றுகையை மீறி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

April 23, 2026

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச்

rob

வட தமிழக தேர்தல் களத்தில் ரொபோக்கள்

April 23, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்தி இளம் வாக்காளர்களை கவர்ந்து