. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த ஆடியோ லான்ச்சுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச்சுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எப்பவும் போல் சென்னையில் இல்லாமல் மலேசியாவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான திட்டத்தை கடந்த ஜுன் மாதமே படக்குழுவினர் போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.