ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மறைந்த தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரை அமெரிக்கா கைது செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சுலைமானியின் மருமகள் ஹமிதே சுலைமானி அஃப்ஷர் (Hamideh Soleimani Afshar) மற்றும் அவரது மகள்.
அவர்களின் அமெரிக்க நிரந்தர குடியிருப்பு உரிமையை (Green Card) வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ரத்து செய்ததை அடுத்து, அவர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹமிதே சுலைமானி ஈரானிய ஆட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ததாகவும், அவரது தஞ்சம் கோரிய விண்ணப்பம் மோசடியானது என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.
சுலைமானியின் மகளான நர்கேஸ் சுலைமானி, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “கைது செய்யப்பட்டவர்களுக்கும் எனது தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர், 2020-ஆம் ஆண்டு ஈராக்கில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்துக் கொண்டு ஈரானிய ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.