மனிதப் புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடரும்! – காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதகுறித்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.பிரதீபனின் மேற்பார்வையின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டது.

அந்த மண்ணின் தன்மை மற்றும் நீர் இருப்பு என்பவற்றின் காரணமாக அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியான சிரமங்கள் காணப்பட்ட போதிலும், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது.

அத்தொழில்நுட்பக் குழுவில் தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்ற இட ஆய்வு அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

அதேவேளை எமது அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கைக் கண்காணித்து வருவதுடன், மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளிலும் முன்னிலை வகித்தனர்.

அத்தோடு முதல் நாள் அகழ்வின்போது தமது அன்புக்குரியவர்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் வரை வருகைதந்திருந்தனர்.

2014 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருக்கக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாட்சியாளர் ஒருவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட குறித்த இடங்கள், 2015 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் ஊடாக தரை ஊடுருவல் ரேடார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு