மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்கள மயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

மட்டக்களப்பில் எல்லைக் கிராமங்களைச் சிங்களமயமாக்கும் திட்டத்தை, இங்கு தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அம்பலப்படுத்தவில்லை? வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல, கிழக்கில் இரா. சாணக்கியன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி பணியவைத்து, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணைபோகும் திட்டத்தை வகுத்துள்ளாரா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை – ஊத்துச்சேனை மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகச் சிங்களமயமாக்குவதற்கு மட்டக்களப்பு ஒரு தடையாக உள்ளது. ஏனெனில் அது கிழக்கின் இதயமாக இருக்கிறது. அதனை நேரடியாக மாற்றுவது கடினம் என்பதால், மட்டக்களப்பின் இரு எல்லைகளான அம்பாறை மற்றும் திருகோணமலையை முதலில் முழுமையாகச் சிங்களமயமாக்கி, மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் அங்கு கைவைக்கலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம்.

“யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே கிழக்கின் எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இதனால்தான், தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து, எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற 1977 ஆம் ஆண்டு ‘வட்டுக்கோட்டை தீர்மானத்தை’ எடுத்தோம்.

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் இத்தகைய குடியேற்றங்களைப் பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ஆனால், 2009 இற்கு பிறகு போராட்டத்தின் சக்தியாக இருந்த மக்களை அழித்து இனப்படுகொலை செய்த பின்னர், இன்று மட்டக்களப்பில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். இதுதான் கசப்பான உண்மை.”

“கிழக்கில் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்ற ராஜபக்ச தரப்பினர் ‘மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை’ ஆரம்பித்தனர். சோளச் செய்கை என்ற பெயரில் போலி உறுதிகளை வழங்கி, சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இதன் விளைவாகவே பண்ணையாளர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதே திட்டம்தான் தற்போது ஊத்துச்சேனை கிராமத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அநியாயத்தை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் முதன்முதலில் வெளிப்படுத்தவில்லை? யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் இங்கு வந்து நிலைமையை நேரில் பார்த்த பின்னரே, இது ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது.”

“சிங்களமயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு கட்டம் வரை கொண்டு செல்வதற்காகவே இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனரா? அவர்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செ. கஜேந்திரனோ அல்லது கஜேந்திரகுமாரோ இது குறித்துப் பேசும்போது, ‘தேவையில்லாத பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்’ என்று பொய்களைச் சொல்லிச் சிறுமைப்படுத்தி, உண்மையை மூடி மறைக்க முடியும் என நினைக்கிறார்கள் போலும்.

மக்களிடம் வாக்குக் கேட்கும் அவர்கள், உங்கள் பிரச்சினைகளை முன்னின்று தீர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள். ஆனால் அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? அவர்களும் இதற்குத் துணை போகிறார்களா? வடக்கில் சுமந்திரன் செய்வது போல, கிழக்கில் சாணக்கியன் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி, சிங்களமயமாக்கலுக்குத் துணை போகிறாரா? தமிழரசு கட்சி சார்பில் தமிழ் தேசியம் பேசித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.”

“பாதிக்கப்பட்ட எல்லைப் பிரதேசங்களில் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டுமே இந்த மண்ணைப் பாதுகாக்க முடியும். நீங்கள் உங்கள் நிலங்களை விட்டு வெளியேறினால் நிலப்பரப்பு சுருங்கும். இதுதான் எதிரியின் விருப்பம். எல்லையில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால் மட்டுமே அவர்கள் அங்கு நிலைத்து நிற்பார்கள்.

எமது அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால், முதலில் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் எங்குப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்களோ, அங்கு நேரில் சென்று அந்தப் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க