பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. இன்று 362 க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் கொண்ட பரந்த வலையமைப்பாக வளர்ந்துள்ள பொதுச் சுகாதார சேவையின் முக்கிய பலம் பொதுச் சுகாதாரக் குழுவே ஆகும்.

அக்குழுவில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH), குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் (PHM) மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட கள அதிகாரிகள் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருவதுடன், அவர்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை வென்று சுகாதார சேவையின் மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

மேலும், நூற்றாண்டு நினைவு மலர், இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகளும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டன.

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொதுச் சுகாதார சேவை என்பது பெருமைமிக்க வரலாறு, நம்பகமான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறை எனச் சுட்டிக்காட்டினார்.

தாய்மார்களின் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் காரணமாக தாய்மார்களின் மரண எண்ணிக்கையை 2,500 இலிருந்து 25 என்ற குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர முடிந்துள்ளதாகவும், 1,000 பிறப்புகளுக்கு 200 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 05-06 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் மலேரியா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்த ஒரு நாட்டில், அந்நோயை முற்றிலும் ஒழிக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நமது நாடு சமூகச் சுகாதார சேவையில் எவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ளது என்பதைக் காட்ட இச்சாதனைகளே போதுமானது எனக் கூறிய அமைச்சர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு சமூகச் சுகாதார சேவையை எவ்வளவு தரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு நமது நாட்டிற்கே உரிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான பெருமளவு சாதனைகளை அடைய முடிந்தமைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களே காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், அதற்காகவும் அண்மையில் ஏற்பட்ட அனைத்து தொற்றுநோய்கள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளின் போதும் சமூகச் சுகாதார சேவை ஊழியர்கள் செய்த மகத்தான அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுமான வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Rajesh Sambhajirao Pandav), அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்ளும்போது கடந்தகால வெற்றிகளை மட்டும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது போதாது என்றும், இலங்கையின் சுகாதாரத் துறையின் தேவைகள் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொற்றா நோய்கள், முதியோர் சனத்தொகை அதிகரிப்பு, மனநலத் தேவைகள், காலநிலை அபாயங்கள் மற்றும் தொற்றுநோய் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல புதிய தேவைகள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மதுபானப் பயன்பாடு போன்ற காரணிகளால் தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த அபாயங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், அவை சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் என்ற வகையில், இலங்கையின் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்த அவர், பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டுப் பயணத்தைப் பாராட்டி, மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்காலப் பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஆரோக்யா’ திட்டத்தின் மூலம், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சுகாதாரத் துறை எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் என்பது குறித்த மிக முக்கியமான தொலைநோக்குப் பார்வையும் செயல்பாடும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சமூகச் சுகாதார சேவையில் குறைந்த முதலீடே செய்யப்படுவதாகப் பேச்சுகள் இருந்தபோதிலும், இம்முறை ‘ஆரோக்யா’ திட்டத்தின் கீழ் முதன்மைத் திட்டமாக சமூகச் சுகாதாரமே திகழ்கிறது என்றும், இதன் மூலம் நாட்டின் சுகாதார அமைப்பில் ஒரு மாற்றம், சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் திறமையான பயன்பாடு பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ வைத்தியர் விந்தியா குமாரபேலி மற்றும் சர்வோதய இயக்கத்தின் தலைவர் சமூக மருத்துவ நிபுணர் விந்தியா ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”