இன்று செம்மணியின் 40 ஆவது நாள்; 471 என்பு கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (22) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் […]
கனடா உடனடியாக எந்தவொரு பதிலடி வரி விதிப்பையும் மேற்கொள்ளப் போவதில்லை-அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி

கனடியப் பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத புதிய வரி விதிப்புகளை (Tariffs) அறிவித்துள்ள போதிலும், கனடா உடனடியாக எந்தவொரு பதிலடி வரி விதிப்பையும் மேற்கொள்ளப் போவதில்லை என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (U.S. Trade Representative) ஜேமிசன் கிரியர் (Jamieson Greer) தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் சபையின் நிதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே கிரியர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தீர்மானங்களைத் தொடர்ந்து, கனடாவின் வர்த்தகத் துறை […]
வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்? ; ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி ;

வடக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகள் வருவதை கவனத்தில் கொண்டு தென்னிலங்கை அதிகமாக அச்சப்படுவது ஏன் என்று ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றபோதும், இளைஞர்கள் அதிகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அவரது அரசாங்கத்தின் மீது ஈர்ப்புடையவர்களாக இருக்கின்றமை தொடர்பிலும் கரிசனைகளைச் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான குழுவினர் அங்குள்ள […]
கனடா: கடைஒன்றில் பெண்ணை இரகசியமாகப் படம் பிடித்த நபர் கைது — மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் அச்சம்!

டொராண்டோ, ஜூலை 22: கனடாவின் ‘நியூ டெகம்செத்’ (New Tecumseth) பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரது ஆடைக்குக் கீழ் இரகசியமாக ஒளிப்படம் (Upskirt photo) எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 30 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 4:30 மணியளவில் அலிஸ்டன் (Alliston) பகுதியில் அமைந்துள்ள கடையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாணப் பொலிஸாருக்கு (OPP) அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. […]
கனடா: பொலிஸார் துரத்திய வாகனம் விபத்துக்குள்ளாகி 19 வயது இளைஞன் பலி — SiRT விசாரணை

நோவா ஸ்கோஷியா, ஜூலை 22: கனடாவின் நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மாகாணத்தில் பொலிஸாாரின் சமிக்ஞையை மீறி அதிவேகமாகச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸ் கண்காணிப்புக் குழுவான SiRT தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் விசேட ரோந்து நடவடிக்கையில் ‘ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ்’ (RCMP) அதிகாரி ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹாவ்ரே […]
ஸ்காார்பரோ வர்த்தகக் கட்டட உடைப்பு மற்றும் சந்தேகத்திற்குரிய தீப்பற்றி எாிந்த சம்பவம் — பொலிஸார் விசாரணை

டொராண்டோ, ஜூலை 22: கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள வர்த்தக மற்றும் குடியிருப்பு வளாகக் கட்டடமொன்றில் புகுந்து திருட முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, அக்கட்டடத்திலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் தீப்பற்றி எாிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்னடி வீதி (Kennedy Road) மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்குப் பகுதிக்கு (Eglinton Avenue East) அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வதாகத் (Break-and-enter) தெரிவிக்கப்பட்ட அழைப்பைத் […]
டொராண்டோ பேருந்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டுத் தேடும் பொலிஸார்

கனடாவின் டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழுவின் (TTC) பேருந்திற்குள் சிறுவன் ஒருவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரின் புகைப்படங்களை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூலை 16ஆம் திகதி பிற்பகல் 4:00 மணியளவில் விக்டோரியா பார்க் மற்றும் டான்ஃபோர்த் வீதிகளின் சந்திப்பில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் விக்டோரியா பார்க் சுரங்கப்பாதை நிலையத்திலிருந்து (Victoria Park Subway Station) பேருந்தில் ஏறி, சாரதியின் இருக்கைக்குப் பின்னால் உள்ள முதல் […]
கனடாவின் டொராண்டோவில் மனிதக் கடத்தலில் ஈடுபட்ட ‘MS-13’ பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் (Greater Toronto Area) பெண் ஒருவரைக் கடத்தி, அவரிடமிருந்து பாலியல் சுரண்டல் மூலம் நிதிப் பலன்களைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ‘MS-13’ எனப்படும் பிரபல சர்வதேச பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பொலிஸார் ‘புராஜெக்ட் மெர்மைட்’ (Project Mermaid) என்ற விசேட விசாரணையைத் தொடங்கினர். அப்போது ஒன்டாரியோவின் கிங்ஸ்டன் சிறையில் நீண்டகாலச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சந்தேகநபர்களில் […]
முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும்வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பில் எதிர்காலத்தில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்றில் 22.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் […]
வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுதலை

வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-2026) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் சீலாப்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள், இரவு 7:48 மணி வரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ இல்லை. இதனால் காவல் […]