பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, ‘டித்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வினய் தாக்கூர் தலைமையிலான Bhaskaracharya Institute of Space Applications and Geoinformatics (BISAG) பிரதிநிதிகள் குழு மார்ச் 9 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

அவர்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துடன் இணைந்து, ‘PM Gati Shakti’ திறந்த மூல கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஒரு புவியியல் (Geospatial) தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளம் பேரிடர் தாக்க மதிப்பீடு செய்வதோடு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகவும் செயல்படும்.

மேலும், இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான Centre for Development of Telematics (C-DoT) பிரதிநிதிகள் குழு மார்ச் 16 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, மொபைல் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப எச்சரிக்கை (Early Warning) முறைமைக்கான Proof of Concept-ஐ வெற்றிகரமாக காட்சிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, Geological Survey of India சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நிலச்சரிவு எச்சரிக்கை முறைமைகள் மற்றும் புவியியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர். அவர்கள் தேசிய கட்டிட ஆராய்சி நிலைய அதிகாரிகளுடனும் சந்தித்து சிறந்த நடைமுறைகள் குறித்து பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்புகளின் நிறைவாக, பேரிடர் தாக்க மதிப்பீட்டு தளமும், மொபைல் அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறைமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எரங்க வீரரத்ன, ஹன்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளும், எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகள் பகிர்வு ஆகியவற்றின் மூலம் பேரிடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.

நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

March 21, 2026

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு

gff

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

March 21, 2026

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில்

5

நாட்டின் 9 மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைகள்!

March 21, 2026

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

dd

பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

March 21, 2026

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை

ve

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

March 21, 2026

675க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்

bi

கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து

March 21, 2026

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில்

photo-collage.png

இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம்; புத்தளம் இளைஞர் யுவதிகள் வடமராட்சியில்

March 21, 2026

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் கீழ் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில்

Peel

மிசிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துக்கள் குறித்து உதவியை நாடும் காவல் துறை

March 21, 2026

பீல் பிராந்தியம் – 11 பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு (CIB) அதிகாரிகள், மிசிசாகாவில் இடம்பெற்ற இரண்டு தீ வைத்த

WhatsApp Image 2026-03-21 at 16.55.44 (1)

பிராம்ப்டனில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்கான தகவல் அமர்வு

March 21, 2026

​​பிராம்ப்டன், மாநகராட்சி விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பிராம்ப்டன் நகரம் 2026 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள்

ghh

அமெரிக்காவிற்குள் கனடாவிலிருந்து மனிதக் கடத்தல் செய்தவர் கைது

March 21, 2026

கனடாவிலிருந்து நயாகரா ஆறு வழியாக ஒரு குடும்பத்தினரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து சென்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 27 வயது

sajith-2

கட்சி தாவும் அரசியலையும் டொலர்களுக்கு நிலைமாறும் அரசியலையும் இப்போதைய சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை

March 21, 2026

தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தத் தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள்

is

எரிவாயு உற்பத்தி மையங்கள் வளைகுடாவில் தாக்கப்படுகின்றன!

March 21, 2026

அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு