பேச்சு திறனை இழந்த விண்வெளி வீரர்; நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

விண்வெளி என்பது புதிர் போன்றது. இதற்கான விடைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து வருகிறோம். இந்த முயற்சியில், விண்வெளி வீரர்கள் ஏராளமான ஆபத்துகளை சந்தித்திருக்கின்றன. அப்படித்தான் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் ஃபிங்கே, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதாவது அவர், தனது பேச்சு திறனை இழந்திருக்கிறார்.

இது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதியதாக விண்வெளிக்கு செல்லும் இஸ்ரோ வீரர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?

ஒரு வாரத்திற்கு முன்னர், அசோசியேட்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு மைக்கேல் ஃபிங்கே அளித்த பேட்டியில், தான் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்து பேசியிருக்கிறார். விண்வெளி வீரர்கள் தங்கள் அனுபவங்களை, ஆய்வுகளுக்காக பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், மைக்கேல் ஃபிங்கே சொன்ன தகவல் மொத்த விஞ்ஞானிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இதற்கு முன்னர் 3 முறை விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். இந்த பயணத்தின்போதுதான் அவர் தனது பேசும் திறனை இழந்திருக்கிறார்.

எப்படி நடந்தது?

ஜனவரி 7ஆம் தேதியன்று, இரவு அந்த சம்பவம் நடந்தது. அடுத்த நாள் அவர் விண்வெளியில் நடக்க பயிற்சி பெற்றிருந்தார். பயிற்சியை முடித்துவிட்டு அவர் சக நண்பர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், திடீரென மைக்கேல் ஃபிங்கேவின் பேசும் திறன் நின்றுப்போனது. சுமார் 20 நிமிடங்கள் வரை அவரால் பேச முடியவில்லை. எந்த வலியும், மற்ற அறிகுறிகள் ஏதும் இல்லாமல் அவரால் பேச முடியாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதை பார்த்த மற்ற விண்வெளி வீரர்கள், உடனடியாக பூமியில் உள்ள மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரியசானது. பூமியிலிருந்து மருத்துவக்குழு கொடுத்த வழிக்காட்டுதல்களை மைக்கேல் ஃபிங்கே பின்பற்றிய பின்னர், பேச்சு திறன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

காரணங்கள் என்ன?

இது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். பேச்சு என்பது, நுரையீரல் காற்று, குரல் நாண்களின் அதிர்வு, நாக்கு மற்றும் உதடுகளின் செயல்பாடுகளால் சாத்தியமாகிறது. இதைவிட முக்கியம், பேசும்போது என்ன பேச வேண்டும் என்பது குறித்து மூளை நமக்கு சிக்னல்களை கொடுக்கும். விண்வெளி பயணத்தின்போது இந்த சிக்னல் பாதிக்கப்படுகிறது. இதுவே பேச்சு தற்காலிகமாக தடைப்பட காரணம்.

அதேபோல, பூமியில் இருக்கும்போது, புவி ஈர்ப்பு விசை காரணமாக உடலில் உள்ள ரத்தம், தண்ணீர் சமமாக பரவி இருக்கும். ஆனால், விண்வெளியில் கிராவிட்டி கிடையாது. எனவே, மொத்த திரவமும் மண்டைக்கு ஏறிவிடும். இதனால் விண்வெளி வீரர்கள் பேசும்போது மூக்கின் வழியாக பேசுவதை போன்று இருக்கும். இதெல்லாம் காரணம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிக்கலா?

இந்தியா, ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ரெடியாகி வருகிறது. சொந்தமாக நாம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல்முறை. எனவே, இந்த பயணத்தில் மைக்கேல் ஃபிங்கேவுக்கு ஏற்பட்டதை போல, நம்முடைய விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இஸ்ரோ மருத்துவக்குழு எல்லாவற்றிற்கும் ரெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

death

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

April 23, 2026

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான

v

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை தலைகீழாக மாற்றியது

April 23, 2026

விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நேரடியான ஆதாரங்கள் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். 41P/Tuttle–Giacobini–Kresák என்று அழைக்கப்படும்

download

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது – இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி

April 23, 2026

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ (Pre-war) காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக்

rat

இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

April 23, 2026

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது

5

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

April 23, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த

ne

அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

April 23, 2026

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள்

vikatan_2026-04-23_pjv1ud9i_WhatsApp-Image-2026-04-23-at-9.38.15-AM

தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய

lpl

லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

April 23, 2026

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள்

Sen

காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

April 23, 2026

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து

Mid photos new.00_01_58_09.Still038

“வாக்களிப்பது அடிப்படை உரிமை; தடையாக இருக்காதீர்கள்!” – 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் கேட்டு விஜய் அதிரடி கடிதம்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து

1dff8c40-3e62-11f1-8887-e93160959470.jpg

காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குப்பதிவு: வெயிலையும் பொருட்படுத்தாமல் குவியும் வாக்காளர்கள்!

April 23, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில்

678180996_3486131861565495_4435347561176496228_n

வவுனியாவில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து ஒருவர் பலி

April 23, 2026

இன்று (23) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் புகையிரதமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர்