பேசாலையில் கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை (1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30) மாலை 6 மணியளவில் காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகில் இரு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் வலையைப் பரப்பிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் படகில் எரிபொருள் தீர்ந்துபோயுள்ளது.

இதனையடுத்து, நீந்திச் சென்று கரையில் இருந்து எரிபொருளை எடுத்துவரும் நோக்கில் குறித்த இளைஞர் கடலில் குதித்துள்ளார். எனினும், அக்காலப் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த பிற மீனவர்கள், கடலில் தத்தளித்த படகையும் அதிலிருந்த மற்றைய மீனவரையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அத்துடன், நீந்திச் சென்று காணாமல்போன இளைஞரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (01) காலை எருக்கலம்பிட்டி கடற்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக அப்பகுதி மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காட்டாஸ்பத்திரி மீனவர்கள், சடலத்தை மீட்டுப் பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன் கரைக்கும் கொண்டுசென்றனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

3

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்

co

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers)

donadltrumps

“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து

August 1, 2026

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்”

ita

தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

August 1, 2026

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில்

Sanak

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் வரவேற்புக்குரியவை – சாணக்கியன்

August 1, 2026

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது

vad

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்!

August 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு

gun

ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

August 1, 2026

ரத்மலானை, கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் இருந்த நபர்

nel

நெல்வயல்களை முற்றாக நாசமாக்கிய காட்டுயானைகள்

August 1, 2026

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளன.

arrest

சோபால புளியங்குளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

August 1, 2026

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக

fila

பிரபல உணவகத்தில் தீ விபத்து

August 1, 2026

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து