“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம்.

இந்நாட்டின் மக்கள் தொகையில் 52% பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் தலைமுறை, இன்று நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது இரகசியமல்ல. ஊதியம் பெறாத இல்லத்தரசிகள் என்ற வகையில் அவர்கள் மேற்கொள்ளும் வகிபாகத்திற்கு மேலதிகமாக, ஆடைக் கைத்தொழில், பெருந்தோட்டத் தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் சேவைத் துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்கிறார்கள்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ஒரு நாடாக நாம் அடைந்த பல பொருளாதார வெற்றிகளுக்கு பெண்கள் வழங்கிய பலம் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். சமூக நீதிக்காக ஆண்- பெண் சமூக சமத்துவத்தை உறுதிசெய்து, பொருளாதார செயல்பாட்டில் மேலும் தீவிரமாகவும் செயற்திறனாகவும் பங்கேற்கச் செய்யும் திட்டங்களை நாம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம்.

நீதியான சமூகம், சுதந்திரமான நாடு மற்றும் சுதந்திரமான பெண் என்ற அபிலாஷையை அடைதல்,வீட்டிலும், போக்குவரத்தின் போதும், சமூகத்திலும், வேலைத்தளத்திலும், அரசியல் களத்திலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக செயல்படவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

பாராளுமன்ற வரலாற்றை மாற்றும் வகையில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு தனித்துவமான வரலாற்று நிகழ்வாகும்.

இந்த வகையில், நாட்டை பொருளாதார, அரசியல், மற்றும் சமூக ரீதியாக புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல நாம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு சமமாக அர்ப்பணிப்புடன் செயல்படும் வலுவான மற்றும் கௌரவத்துக்குரிய பெண்களின் தலைமுறையை உருவாக்குவது எமது பொறுப்பும் உறுதிப்பாடும் ஆகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மேலும், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண்களின் தொழில்முயற்சியை விரிவுபடுத்தி, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இத்தகைய சூழலில், இலங்கைப் பெண்களின் பெருமையையும் வலிமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், ‘பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தமைக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள மகளிர் தினத்திற்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

seeni

காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

March 8, 2026

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில

arrest

போதைப்பொருளுடன் இருவர் கைது!

March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு

m

மகரகமவில் பாரிய தீவிபத்து!

March 8, 2026

மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள்

wate

லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு!

March 8, 2026

கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) காலை

no

நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

March 8, 2026

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

shi

தொடர் தாக்குதல்களில் ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

March 8, 2026

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன

anu

“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

March 8, 2026

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில்,

acc

நவாலியில் தனியார் பேருந்தும் கன்டர் ரக வாகனமும் மோதி விபத்து 

March 8, 2026

யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது

nal

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் குறித்து சபையில் கடும் வாக்குவாதம்

March 8, 2026

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு

hi

அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

March 8, 2026

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ்,

viji

சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

March 8, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும்

fue

எரிபொருள் கையிருப்பு; வெளியான முக்கிய தகவல்

March 8, 2026

தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்