புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று போராடுகின்றோம் என்று திருகோணமலையில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திங்கட்கிழமை (19) கூறினார்.

“2004 இல் திருகோணமலை நகர மத்தியில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க பிரபாகரனுடன் போரிட்டு அதனை பாதுகாத்தோம்.புத்தர் சிலைகளை பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்” என்றார்.

திருகோணமலை டச்பே கடற்கரையில் 2025 நவம்பர் 16 மாதம் வைக்கப்பட்ட புத்தர்சிலை தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (19) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை பார்வையிட்ட பின்னர் சரத் வீரசேகர நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகங்களை சந்தித்த போதே மேற்கண்ட கருத்தை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்

“நாட்டின் ஜனாதிபதியும்,பிரதமரும் ஏனைய சில அமைச்சர்களும் பெளத்த சமயத்தையும்,பெளத்த சாசனத்தையும் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.இதற்கு மேலாக தற்போது பெளத்த பிக்குகளை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.இவ்வாறு இவர்கள் தொடர்ந்து பெளத்தத்திற்கு எதிராக செயற்படுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார்

ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் உண்ணுகின்றார்.ஆனால் சில் அனுஷ்டிக்க தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பெளத்தர்களை அவமதித்து கருத்து கூறுகின்றார்.தெற்கில் இருந்து செல்பவர்கள் இனவாத முரண்பாட்டை ஏற்படுத்தவே வடக்கிற்கு செல்கின்றனர் என்று கூறி எமது மத செயற்பாடுகளை நிந்திக்கின்றார்.பிரதமரும்,அமைச்சர் லால் காந்தவும் கூட தொடர்ந்து கெளரவத்திற்குரிய பிக்குமாரை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களுக்கு இதன் மூலம் துரோகம் இழைக்கப்படுகின்றது” என்று அவர் மேலும் கூறினார்.

இதே வேளை வழக்கு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெகம்பதி,மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ,மிகிந்தலை விகாரையின் நாயக்க தேரர் மற்றும் அதிக எண்ணிக்கையான தேரர்கள்,அரசியல்வாதிகள் ஆகியோர் திருகோணமலைக்கு வருகை தந்திருந்தனர்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்