ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
தாக்குதலைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.