‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையில் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த அனுபவம் குறித்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் மெகா ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு இணையாக வசூலில் வரவேற்பினை பெற்று வருவதால் தியேட்டர் உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதோடு ரஜினி ரசிகர்களும் திரையரங்குகளில் படையப்பாவின் தரிசனத்தை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘படையப்பா’ மறு வெளியீடு குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். அதோடு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ‘படையப்பா’ ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தியேட்டரில் கண்டு ரசித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “படையப்பா படத்தை மீண்டும் 25 வருடங்களுக்கு பின்பாக அனைவரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுடன் சேர்ந்து நானும் படத்தை பாத்தேன். அப்பா 25 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கதை, இப்போது பார்க்கும் போதும் புதிய படம் மாதிரி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் அப்பாவுடன் திருப்பதிக்கு சென்ற காரணத்தால், அந்த நாள் படத்தை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே பாடல்களை எல்லாம் ஒன்ஸ் மோர் செய்து பார்த்திருந்தாலும், இப்போது தான் ஊஞ்சல் காட்சிகள் போன்ற சீன்களை ஒன்ஸ் மோர் செய்து பார்க்கிறேன்.

அப்பா ஒரு எமோஷன். தியேட்டருக்கு வந்து அனைவரும் படத்தை பாருங்கள். அப்பா ‘படையப்பா’ ரீ ரிலீசுக்காக கொடுத்த பேட்டியை நான் தான் இயக்கினேன். எனக்கு அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். எங்கள் குடும்பத்துடைய சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். கமர்ஷியல் ஜானரில், ரஜினியின் தரமான மாஸ் சீன்களுடன் வெளியான ‘படையப்பா’ இன்றளவும் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து மறு வெளியீட்டிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். பிரபலங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில், ரசிகர்கள் இடையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்