பச்சிலைப்பள்ளி – முகாவிலில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட்டம்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது.

இராணுவத்தினர் வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைப்போம் என தெரிவித்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று தமிழ்; மக்களின் உறுதி காணிகளை இராணுவத்தினருக்கு நிரந்தர முகாமை அமைப்பதற்காக கையகப்படுத்த முயல்கின்றது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவேளை இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலளார் பிரிவிற்கு உட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளுக்கு தமிழ் மக்களின் உறுதி காணிகளை அவர்களின் விருப்பங்களுக்கு மாறாக சுவீகரித்து அந்த படையினருக்காக வழங்குவதற்கு என இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் மததலைவர்களும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் வெளியிட்ட எதிர்ப்பின் காரணமாக இந்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுறுத்தல் நில அளவை திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இங்கே நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையிலே இந்த நில அளவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலே இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகின்றது.

இந்த அளவீட்டு செயற்பாடுகளை முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுரகுமார திசநாயக்க பதவிக்கு வருகின்ற போது தாங்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிப்போம் மக்களின் காணிகளில் இராணுவத்தினருக்கு வேலை இல்லை என தெரிவித்து எங்களை முழுமையாக நம்பவைத்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றுதான் அவர்கள் பதவி வந்தார்கள்.

அவர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறீதரனும் மிக தெளிவாக இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும், இராணுவமுகாம் அகற்றப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த போது அது தீர்மானமாக உள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியினர் இ;வ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது அவர்களின் முகங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று இந்த போராட்டம் இடம்பெறவில்லை என்றால் இங்கு நிலஅளவீடு இடம்பெற்று பல ஏக்கர் காணிகள் எங்களை அழித்த இராணுவத்தினர் நிரந்தரமாக தங்குவதற்கான ஒரு முகாமாக மாற்றப்பட்டிருக்கும்.

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

acci main

கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி

June 19, 2026

2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்

d

36வது தியாகிகள் தின நினைவேந்தல்!

June 19, 2026

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை

chemmani

செம்மணி புதைகுழியில் 387 என்புக்கூடுகள் நேற்று வரை அடையாளம்

June 19, 2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து

us

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை திடீர் இரத்து

June 19, 2026

பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைச் செயல்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்தின்

Cont

புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

June 19, 2026

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி

ca

உலக கிண்ண கால்பந்தாட்டம்; கனடா ஆதிக்கம்

June 19, 2026

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா

727322968_2861356607530672_2715840258650210241_n

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

June 19, 2026

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land

ravikaran11

வட்டுவாகால் விகாரைக்குக் கீழும் மனித புதைகுழி — துரைராசா ரவிகரன்

June 19, 2026

வட்டுவாகல் விகாரைக்கு கீழும் மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட