நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதாரக் கையாளுகை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெருக்கடி காலத்தில் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் சென்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஹரீன், ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்குத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலையே ஏற்படும் என எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகப் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சேமித்து வைத்துவிட்டுச் சென்ற 6 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பு மாத்திரமே இன்று எஞ்சியுள்ள ஒரே பலம் என்றும், அதனைத் தவிர இந்த அரசாங்கத்திடம் எந்தவொரு நிதி முகாமைத்துவ திட்டமும் இல்லை என்றும் அவர் சாடினார்.

தற்போதைய அரசாங்கம் தாங்கள் திருடவில்லை எனக் கூறிவருவது வேடிக்கையானது எனக் குறிப்பிட்ட அவர், இவர்கள் நாட்டுக்காக எந்தவொரு உருப்படியான வேலையையும் செய்யாததால்தான் திருடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது என்றார். எதனையாவது செய்ய முற்பட்டால் அது முதல் முயற்சியிலேயே படுதோல்வியில் முடிவதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்குத் தான் பொறுப்பல்ல மாறாக உலகப் போரே காரணம் என ஜனாதிபதி கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

எதனையும் கண்மூடித்தனமாக நம்பும், சிந்திக்கும் திறனற்ற மக்கள் இருக்கும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

அரசாங்கம் எதனைக் கையிலெடுத்தாலும் அதில் தோல்வியே மிஞ்சுகிறது என்பதற்கு எரிவாயு விநியோகம் மற்றும் ‘QR’ முறைமையே சாட்சி எனத் தெரிவித்த அவர், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றால் ஏன் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பினார்.

கப்பல்கள் வரிசையாக வரும் என்று தொடர்ச்சியாகப் பொய்க் கதைகளைக் கூறி வந்தவர்கள், இப்போது ஏதோ ஒரு நாளில் ஒரு கப்பல் வரும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டதோடு, எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்த ஆட்சியாளர்களிடம் இல்லை எனவும் ஹரீன் பெர்னாண்டோ கடுமையாக விமர்சித்தார்.

namal

மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

March 18, 2026

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக

kava

மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

March 18, 2026

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும்

vav

நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

March 18, 2026

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும்

hurm

மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

March 18, 2026

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும்

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது