நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிக விவாதம் நடந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற கல்வி வலைத்தளம் ஒன்று நாமல் ராஜபக்சவின் சட்டமாணிப் பட்டத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது.
அதில் நாமல் ராஜபக்ச City University of Londonஇல் பெற்ற சட்டப் பட்டப்படிப்பின் பழைய மாணவர்களது பட்டியலில் 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்தின் முன்னாள பிரதமர் மார்கரெட் தாட்சர் பெற்றுள்தோடு இரண்டாம் இடத்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த பட்டியல் சிட்டி பல்கலைக்கழத்தின் புகழ்பெற்ற பழைய மாணவர்கள் நூறு பேரின் யெர்களை உள்ளடக்கியது.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த தரப்படுத்தல் விவகாரம் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் சட்டமாணி பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழை முதுகலைப் பட்டத்திற்கு பதிவு செய்வதற்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாமல் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பட்டச்சான்றிதழ் செப்டெம்பர் 15, 2009 அன்று வழங்கப்பட்டது, ஆனால் அந்த பட்டச்சான்றிதழில் கையொப்பமிட்ட துணைவேந்தர் ஜூலை 23 அன்று பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகிய 54 நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் துணைவேந்தராக பட்டச் சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த லண்டன் நிறுவனம் அக்டோபர் 15, 2009 அன்று இலங்கை சட்டகல்லுாரியில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகக் கூறும் நாமல், செப்டம்பர் 25, 2009 அன்று சட்ட கல்லுாரியில் சேர விண்ணப்பித்தார்.
அவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அதே நாளில் சட்டகல்லுாரி அதை ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்தில், லண்டன் சிட்டி யுனிவர்சிட்டி சட்ட கல்லுாரில் இருந்து ஒப்புதல் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.