நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.

இரத்தினபுரி, காலி, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய 8 மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, நாடு முழுவதும் 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள 18 தற்காலிகப் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 446 குடும்பங்களைச் சேர்ந்த 1,724 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம, எஹெலியகொட மற்றும் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் மட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஎல்ல, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத, கலவானை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் மட்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு மற்றும் களனி கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இடிமின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

cyber crimi

2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை: இலங்கை பொலிஸாருக்கு ஆஸ்திரேலிய மத்திய பொலிஸார் அவசர உதவி

May 26, 2026

இலங்கை நிதி அமைச்சின் (Finance Ministry) கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்புச்

sajith 2026

அரசாங்கம் போலி ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது; பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் எவ்வளவு? சஜித் பிரேமதாஸ கேள்வி!

May 26, 2026

இலங்கை தற்போது பாரிய பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், அரசாங்கம் நாட்டின் உண்மையான நிதி நிலைமையைப் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக

Cont

ஏற்றுமதி வருமானம் உயர்வு

May 26, 2026

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,

706711311_122294320256194641_9183670887836492799_n

கனடாவில் தெற்காசிய வர்த்தகர்களை அச்சுறுத்திய ‘போர் பிரதர்ஸ்’ சர்வதேசக் கொள்ளைக் கும்பல் அம்பலம்; 17 பேர் அதிரடி கைது!

May 26, 2026

கனடாவின் பீல் பிராந்தியம் (Peel Region) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தெற்காசிய (South Asian) வர்த்தகர்களை ஆயுத

flood

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் 31,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

May 26, 2026

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக

Sameera

பலஸ்தீனர்கள் தினமும் மோசமான சித்திரவதைகளை எதிர்கொள்கிறார்கள் – சமீரா மெஹ்புப்தீன்

May 26, 2026

காஸா நோக்கிப் பயணமான ‘சுமுத் குளோபல் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச கப்பல் பேரணியில் பங்கேற்று, பின்னர்

fss

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் கிண்ணியாவில் கைது

May 26, 2026

ருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள், அவற்றின் சாரதிகள் மற்றும் அனுமதியின்றி

kajend

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி செய்கிறார்கள் – செல்வராஜா கஜேந்திரன்

May 26, 2026

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக

706318351_122294335838194641_3083246395089727652_n

ரொறன்ரோ அடுக்குமாடி குடியிருப்பில் நபர் மீது கொடூரத் தாக்குதல்; 33 வயதுடைய சந்தேகநபரைத் தீவிரமாகத் தேடும் பொலிஸார்!

May 26, 2026

கனடாவின் ரொறன்ரோவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பொது நடைபாதைக்குள் புகுந்து, முகம் தெரியாத நபர் ஒருவரைத் தாக்கிப் படுகாயப்படுத்திய மற்றும்

708193332_122294365010194641_4242269405742790970_n

கனடாவில் மசாஜ் கிளினிக்கில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; 55 வயதுடைய சிகிச்சை நிபுணர் கைது; மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம்!

May 26, 2026

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், வோன் (Vaughan) நகரிலுள்ள ஆரோக்கிய நல்வாழ்வு மருத்துவக் கிளினிக் (Wellness clinic) ஒன்றில், பெண் வாடிக்கையாளர்

CANADA BORDER IMM

மூக வலைத்தளம் ஊடாக 15 வயதுச் சிறுமிக்கு வலைவீசிய எட்மன்டன் நபர் கைது; நிபந்தனைப் பிணையில் விடுதலை!

May 26, 2026

கனடாவின் அல்பர்ட்டா மாகாணம், மொரின்வில் (Morinville) பகுதியில் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) சமூக வலைத்தளம் ஊடாக 15 வயது மைனரை ஏமாற்றி,

canada policee

ரொறன்ரோவில் பாரிய மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்; இருவர் கைது; மேலும் பல யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம்

May 26, 2026

கனடாவின் ரொறன்ரோ நகரில் 23 வயதுடைய யுவதி ஒருவரை ஏமாற்றி, அச்சுறுத்திப் பாலியல் கடத்தலில் (Human trafficking) ஈடுபடுத்திய குற்றச்சாட்டின்