நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும் 30 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி சபையில் கூறியிருந்த நிலையில், திடீரென டீசல் விலையை 22 ரூபாவினாலும் 92 ரக பெற்றோல் விலையை 24 ரூபாவினாலும் அதிகரித்தது அநீதியானது எனக் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், தற்போதைய விலை அதிகரிப்பானது பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் ஈட்டும் ஒரு சூழ்ச்சியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இலங்கையின் தேயிலை, ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கும் டொலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் முறையான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என மரிக்கார் சாடினார்.

அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்கவேண்டியது அவசியம் எனவும், வரி தடைகளை நீக்கி டொலர்களை நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தேர்தல் காலங்களில் அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்க முடியும் என்ற கூற்றை அரசாங்கம் தற்போது நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 11ஆவது கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதால் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி 25 நிலக்கரி கப்பல்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நட்டமானது சுமார் 35,000 மில்லியன் ரூபாவைத் தாண்டும் என அவர் மதிப்பிட்டார். இந்த ஊழல் மற்றும் நட்டத்தின் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எச்சரித்த அவர், இதற்குக் காரணமான மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்த ஊழல்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும் எனத் தெரிவித்த மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தி இந்த மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட

Ir

இலங்கையில் உள்ள தமது நாட்டவரின் சடலங்களைப் மீளப்பெற ஈரான் நடவடிக்கை

March 10, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில்

ceb

கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வேலைநிறுத்தம் தொடரும் – மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள்

March 10, 2026

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Accident

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

March 10, 2026

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர்

MAr

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

March 10, 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம்

Nam

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

March 10, 2026

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது

nal

2016 பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம்!

March 10, 2026

2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார

Yogarasa

திருச்சி முகாமில் ஈழத்தமிழர்; உண்ணாவிரதப் போராட்டம்!

March 10, 2026

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன்

Death-2

மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை: இளவாலையில் சம்பவம்

March 10, 2026

யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது. டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச்

an

ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்

March 10, 2026

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே