நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும் 30 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி சபையில் கூறியிருந்த நிலையில், திடீரென டீசல் விலையை 22 ரூபாவினாலும் 92 ரக பெற்றோல் விலையை 24 ரூபாவினாலும் அதிகரித்தது அநீதியானது எனக் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், தற்போதைய விலை அதிகரிப்பானது பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் ஈட்டும் ஒரு சூழ்ச்சியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இலங்கையின் தேயிலை, ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கும் டொலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் முறையான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை என மரிக்கார் சாடினார்.

அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்கவேண்டியது அவசியம் எனவும், வரி தடைகளை நீக்கி டொலர்களை நாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தேர்தல் காலங்களில் அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்க முடியும் என்ற கூற்றை அரசாங்கம் தற்போது நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 11ஆவது கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதால் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி 25 நிலக்கரி கப்பல்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நட்டமானது சுமார் 35,000 மில்லியன் ரூபாவைத் தாண்டும் என அவர் மதிப்பிட்டார். இந்த ஊழல் மற்றும் நட்டத்தின் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எச்சரித்த அவர், இதற்குக் காரணமான மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்த ஊழல்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும் எனத் தெரிவித்த மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தி இந்த மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.