நாட்டில் கடல் மற்றும் வான் வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை

நாட்டின் இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்கில், அரசாங்கம் விசேட தேசிய வேலைத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக தேசிய திட்டத்தின் கீழ், கடல் மற்றும் வான்வழி போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று போதைப்பொருள் பிரிவு பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாலில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மிக முக்கியமான சொத்துக்களான இளைய தலைமுறையினரையும், சிறுவர்களையும் குறிவைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக விசேட தேசிய வேலைத்திட்டம் ஒன்று தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் தலைமையில், ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நாடே ஒன்றாக என்ற தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு தற்போது 7 மாதங்களுக்கும் மேலாகிறது. இக்காலப்பகுதியில் இலங்கை பொலிஸ்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, முப்படைகள், புலனாய்வுத்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் பல பாரிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

நாட்டிற்குள் பெரும்பாலான போதைப்பொருட்கள் கடல் வழியாவே கடத்தி வரப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக வான்வழியாகவும் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளது. கடல் மார்க்கமாக நடைபெறும் இந்த சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காகப் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருமளவிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அண்மைக்காலமாக வான்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வரும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற கனேடிய நாட்டுப் பெண் ஒருவர் 35 கிலோ கிராம் போதைப்பொருளுடனும், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த நபர் ஒருவர் 47 கிலோ கிராம் போதைப்பொருளுடனும் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் நவீன ஸ்கேனிங் மற்றும் சோதனை நடவடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதுமட்டுமன்றி போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதுடன் நின்று விடாமல் அதன் பின்னணியில் காணப்படும் சர்வதேச கடத்தல் காரர்களின் வங்கிக் கணக்குகள் நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அவர்களது உள்நாட்டு முகவர்களைக் கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டிற்குள் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படும் இந்த வலையமைப்பை முற்றிலுமாக முடக்கி, அதனை வேரோடு அழிப்பதே அரசாங்கத்தினதும், அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் முதன்மையான நோக்கம் ஆகும் என்றார்.

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்

ff

புதிய அரசியலமைப்பு; இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைக்கத் தீர்மானம்

June 30, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும்

fuel_1

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு

June 30, 2026

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

wind

பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை

June 30, 2026

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என