நாட்டின் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு கொலை மிரட்டல் ; ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்கைதிகள் நாட்டின் சட்டரீதியான பராமரிப்பில் உள்ளவர்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கமும் பொறுப்பான அமைச்சர்களும் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது, கைபேசிகள் பயன்படுத்தப்படுவது மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இக்கூற்றானது, தங்களது கடமையையும் பொறுப்பையும் அரசாங்கம் சரியாக நிறைவேற்றவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. சிறைச்சாலைச் சுவர்களில் ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தாலும், சுவர்களுக்குள் மனித உரிமை மீறல்களுமே இடம்பெறுகின்றன.

பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினரின் தகவல்களைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் கூட அச்சுறுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் கூற்றை மட்டும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் குரலற்றவர்களின் குரலாகவும் செயற்படும் அமைப்புகளை அடக்குமுறை மூலம் முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்குப் பேரபாயமாகும்.

குறிப்பாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளான சிரேஷ்ட சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகியோருக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு குழுவின் பெயரைப் பயன்படுத்தி, இந்த விவகாரங்களில் தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கலாச்சாரத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், மீண்டும் இத்தகைய மிரட்டல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டமை அவர்களின் உரிமையாகும். தற்போதைய எதிர்க்கட்சிகள் கூட ஜெனீவா செல்வதாகக் கூறும் போது, சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு ஒருபோதும் அச்சப்படாது. இந்த அமைப்பு தனித்து செயற்படவில்லை; அவர்களது அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும், அவர்கள் எடுக்கும் எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அரசாங்கம் இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ctr-2025-12-22-14-41-49

“தொகுதிப் பக்கமே போகாத எம்.எல்.ஏ-க்களுக்கு அத்தனை கார் எதற்கு?” – திமுகவைச் சாடிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்!

August 24, 2026

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியைத் தொடங்கி வைத்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்

1200-675-27217758-thumbnail-16x9-vanni-aspera

“சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க திமுக என்ன செய்தது?” – அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!

August 24, 2026

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மீதான விமர்சனங்கள், உதயநிதி

Parandur-Airport-2026-08-40023cdbed7b28a40fa3190b593f33ac

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்

August 24, 2026

வசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள

anbumani

“2031-ல் பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமையும்!” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

August 24, 2026

சேலம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும்

dailythanthi_2026-08-24_f2q30ykx_vijayone33

ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; பரந்தூர் விமான நிலையம் ரத்து – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

August 24, 2026

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANURA PARL

சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார்

suresh11

சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக

778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.