சென்னை:
ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகத் தொழில் அதிபரான மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) – நாகலட்சுமி (42) தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் பிரிந்து சென்ற நிலையில், நாகலட்சுமி சுயமாகப் புடவை வியாபாரம் செய்து முன்னுக்கு வந்ததோடு, தனது இரண்டு மகன்களையும் மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியன், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நேற்று மதியம் மகனுக்கு “நானும் அம்மாவும் இருக்க மாட்டோம்” என மெசேஜ் அனுப்பிவிட்டு, நாகலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி முடிந்து வந்த மகன், ரத்த வெள்ளத்தில் தாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். தொழில் நஷ்டம் மற்றும் பணத் தகராறு காரணமாக இந்த விபரீதம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவத்தின்போது வீட்டின் கதவு திறந்திருந்ததால் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#ChennaiCrime #Nanganallur #DoubleDeath #FamilyDispute #MurderAndSuicide #AdambakkamPolice #AlandurNews #BusinessWomanMurder #CrimeNews #BreakingNews #TamilNaduNews #SocialIssue #PoliceInvestigation #ChennaiNews #April29