தாய்லாந்தில் தொடருந்து ஒன்றின் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்துடன் 55 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் 195 பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து, பேங்கொக்கிலிருந்து புறப்பட்டு நாட்டின் வடகிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் அதிவேக, தொழில்நுட்பம் கொண்ட தொடருந்து பாதையை அமைக்கப் பயன்படுத்தப்படும் கட்டுமான கிரேன் ஒன்று குறித்த தொடருந்து பெட்டிகள் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தின் விளைவாக தொடருந்து தடம் புரண்டு தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.