தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை (செவ்வாய்க்கிழமை, ஜூன் 09) இந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.