தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு!

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றிரவு (19.11.2025) உயிரிழந்துள்ளார்.

ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.

இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலாவும் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரங்கல் அறிக்கையில் மேலும்,

கிளிநொச்சி – மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் மனைவியின் தாயார் தேவதாஸ் கமலா, 19.11 2025 அன்று திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

அவ்வாறிருக்க, கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்க இயலாது நோயுற்ற அவரது துணைவியார், கடந்த 2018ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்திவிட, பிள்ளைகளான பள்ளி செல்லும் பிஞ்சுகள் இரண்டும், தந்தையைப் பிரிந்து தாயையும் இழந்து நிர்க்கதி நிலையுற்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அத்தருணத்தில், அவர்களது பேத்தியாரான கமலா, தனது இயலாமை மற்றும் முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் அந்தப் பிள்ளைகளை பார்த்துப் பராமரித்து வந்திருந்தார். இன்று, அந்தத் தாயாரும் உயிர் நீத்தமையானது, அந்தப் பிள்ளைகளின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற இந்தப் பள்ளிப் பிஞ்சுகளின் தந்தையான, ‘அரசியற் கைதி ஆனந்தசுதாகர்’ விடுதலை பெற்று வீடுதிரும்பி, அந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும்.

அன்னாரது நல்லாத்மா பரமன் பதமடைய பிரார்த்திப்பதோடு, துயர் சுமந்து வாழும் பேரக்குழந்தைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு, தனது ஆழ்ந்த அனுதாபங்ளை தெரிவித்துக்கொள்கிறது – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

OMLNFEEWGNDCXH67ATNFWCRMKI

கனடாவில் சோகம்: மாயமான புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

May 25, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின்

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்

1200-675-26085949-thumbnail-16x9-2

“விஜய் சிஎம் ஆவதைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி வைக்கப் பார்த்தன!” – தேர்தல் ரகசியத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்!

May 24, 2026

விருதுநகர்: “வாக்கு எண்ணிக்கை நாளன்று டெல்லி பாஜக-வின் உத்தரவின்படி, நடிகர் விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் இணைந்து