தமிழ்ப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி?

வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த காணியை அரசாங்கத்தால் மீள சுவீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2002ஆம் ஆண்டு வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக 210 பேர்ச்சஸில் காணியொன்று ஒதுக்கப்பட்டது. வத்தளையில் தற்போது சுமார் 9000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 33,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன.

ஆனால் இதுவரைக் காலமும் 1 – 13ஆம் வகுப்பு வரை முழுமையான ஒரு தமிழ் பாடசாலை கூட அமைக்கப்படவில்லை. இது தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாரிய நெருக்கடியாகவுள்ளது. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று, அதன் பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையை தமிழ் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக காலம் காலமாக நாம் போராடி வந்த நிலையில், 2018இல் எமது போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

இது நகரசபைக்கு சொந்தமான காணியாகும். 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அமைச்சர்களான சந்திரசேகர் மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பாடசாலையை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்த நடவடிக்கைகளும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டன. எனினும் 2018இல் அப்போதைய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலையீட்டின் கீழ் இந்தக் காணி பாடசாலைக்காக என ஒதுக்கப்பட்டது.

நகரசபையின் கீழ் காணப்பட்ட குறித்த காணி மாகாண கல்வி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு, பிரதேசசபை அலுவலகத்தின் ஊடாக வலய கல்வி திணைக்களத்து வழங்கப்பட்டது. காணி ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதில் பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை அடிப்படையாகக் கொண்ட இனவாத பிரச்சினைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் நிதி பற்றாக்குறையெனக் கூறி பாடசாலை நிர்மாணப்பணிகள் காலம் தாழ்த்தப்பட்டன.

எனினும் நாம் எமது சொந்த நிதியை வழங்குவதாகக் கூறிய பின்னர், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் சில தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதன் பின்னரான கொவிட் பரவல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மொழி ரீதியாக பாடசாலைகளை அமைப்பதில்லை என்பது தமது கொள்கையெனக் கூறி, இந்தக் காணியை மீள கையகப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த வருடமாக இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், இந்த காணியை மீள கையகப்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. நகரசபைத் தலைவர் கூட்டம் நிறைவடைய முன்னரே அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இந்த காணியை அரசாங்கம் மீள சுவீகரிப்பதற்கான யோசனையை முன்வைத்து, அனுமதியை பெற்றனர். எனினும் நீண்ட விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக இந்த யோசனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான வீதிக்கு அருகிலுள்ள காணியாகும். ஆனால் அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு திட்டமும் இங்கு முன்னெடுப்பதற்கு முன்மொழியப்படவில்லை. காணியை கையகப்படுத்திய பின்னர் ஏதேனும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே திட்டமிடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய இந்த காணி மீளப் பெறப்பட்டால் வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான எமது 25 ஆண்டு கால போராட்டம் தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடைவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றார்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்