தமிழ்ப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி?

வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த காணியை அரசாங்கத்தால் மீள சுவீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2002ஆம் ஆண்டு வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக 210 பேர்ச்சஸில் காணியொன்று ஒதுக்கப்பட்டது. வத்தளையில் தற்போது சுமார் 9000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 33,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன.

ஆனால் இதுவரைக் காலமும் 1 – 13ஆம் வகுப்பு வரை முழுமையான ஒரு தமிழ் பாடசாலை கூட அமைக்கப்படவில்லை. இது தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாரிய நெருக்கடியாகவுள்ளது. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று, அதன் பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையை தமிழ் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக காலம் காலமாக நாம் போராடி வந்த நிலையில், 2018இல் எமது போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

இது நகரசபைக்கு சொந்தமான காணியாகும். 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அமைச்சர்களான சந்திரசேகர் மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பாடசாலையை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்த நடவடிக்கைகளும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டன. எனினும் 2018இல் அப்போதைய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலையீட்டின் கீழ் இந்தக் காணி பாடசாலைக்காக என ஒதுக்கப்பட்டது.

நகரசபையின் கீழ் காணப்பட்ட குறித்த காணி மாகாண கல்வி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு, பிரதேசசபை அலுவலகத்தின் ஊடாக வலய கல்வி திணைக்களத்து வழங்கப்பட்டது. காணி ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதில் பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை அடிப்படையாகக் கொண்ட இனவாத பிரச்சினைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் நிதி பற்றாக்குறையெனக் கூறி பாடசாலை நிர்மாணப்பணிகள் காலம் தாழ்த்தப்பட்டன.

எனினும் நாம் எமது சொந்த நிதியை வழங்குவதாகக் கூறிய பின்னர், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் சில தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதன் பின்னரான கொவிட் பரவல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மொழி ரீதியாக பாடசாலைகளை அமைப்பதில்லை என்பது தமது கொள்கையெனக் கூறி, இந்தக் காணியை மீள கையகப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த வருடமாக இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், இந்த காணியை மீள கையகப்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. நகரசபைத் தலைவர் கூட்டம் நிறைவடைய முன்னரே அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இந்த காணியை அரசாங்கம் மீள சுவீகரிப்பதற்கான யோசனையை முன்வைத்து, அனுமதியை பெற்றனர். எனினும் நீண்ட விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக இந்த யோசனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான வீதிக்கு அருகிலுள்ள காணியாகும். ஆனால் அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு திட்டமும் இங்கு முன்னெடுப்பதற்கு முன்மொழியப்படவில்லை. காணியை கையகப்படுத்திய பின்னர் ஏதேனும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே திட்டமிடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய இந்த காணி மீளப் பெறப்பட்டால் வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான எமது 25 ஆண்டு கால போராட்டம் தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடைவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றார்.

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா

minister-maria-wilson

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்!” – வேளாங்கண்ணியில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அதிரடி அறிவிப்பு!

May 31, 2026

நாகப்பட்டினம்: “தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னதமான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த

maalai-malar_2026-05-30_ingb99wd_ramesh

“தவறிழைத்த அர்ச்சகரைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு?” – திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அசுர வேகப் பதிலடி!

May 31, 2026

தூத்துக்குடி: “ஆன்மீகப் பூமி திருச்செந்தூர் கோயிலில் மாஸ்க் அணிந்து நடத்திய அதிரடி ஆய்வில், பக்தர்களைச் சுரண்டி லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்

leema-rose-martin-interview-admk-split-controversy-sp-velumani-group-coimbatore-2026-05-15-16-50-35

“எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா?” – தன்னை விமர்சித்த வாடகை பேச்சாளர்களை அசுர வேகத்தில் வெளுத்து வாங்கிய லீமா ரோஸ் மார்ட்டின்!

May 31, 2026

சென்னை: “அதிமுக-வுக்குள் நிலவிய உள்கட்சிப் பூசல்கள் அனைத்திற்கும் நான்தான் காரணம் என எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றிச் சொல்லிய கட்டுக்கதைகள்

Inbathurai

“ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்!” – ‘நிழல் முதல்வர்’ என அதிரடியாக கிண்டலடித்த அதிமுக எம்பி இன்பதுரை!

May 31, 2026

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வேகத் தூணாக வலம் வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வாழ்நாளில்

7d68301febfdc77e4fa5939a4022b2f51779584709047732_original

“டாஸ்மாக்கை கண்ணியமான துறையாக நடத்துவோம்!” – பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை ஒழிக்க அமைச்சர் விக்னேஷ் அசுர வேக அதிரடிப் பேச்சு!

May 31, 2026

கோயம்புத்தூர்: “அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போலத் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் நிறுவனத்தை ஒட்டுமொத்தச் சக தொழிலாளர்களும் மதித்துப் பார்க்கும்

1200-675-26809821-thumbnail-16x9-may30

“தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்!” – மேகதாது அணைக்கு எதிராக கர்நாடகாவை முற்றுகையிட அசுர வேகத்தில் கிளம்பிய தமிழக விவசாயிகள்; பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

May 31, 2026

தஞ்சாவூர்: “கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட முற்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சுடுகாடாக மாறி, விவசாய மக்கள் அகதிகளாக

2

“வள்ளுவருக்கு மீண்டும் காவி பெயிண்டா?” – ஆளுநர் மாளிகை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

May 31, 2026

சென்னை: “ஆளுநர் மாளிகையில் தமிழர்களின் ஆகச்சிறந்த அடையாளமான திருவள்ளுவருக்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு எதிராக, எப்போதும் ‘மியூட்’ (Mute)

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக

ar

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

May 31, 2026

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு