தமிழ்ப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி?

வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த காணியை அரசாங்கத்தால் மீள சுவீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2002ஆம் ஆண்டு வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக 210 பேர்ச்சஸில் காணியொன்று ஒதுக்கப்பட்டது. வத்தளையில் தற்போது சுமார் 9000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 33,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன.

ஆனால் இதுவரைக் காலமும் 1 – 13ஆம் வகுப்பு வரை முழுமையான ஒரு தமிழ் பாடசாலை கூட அமைக்கப்படவில்லை. இது தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாரிய நெருக்கடியாகவுள்ளது. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று, அதன் பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையை தமிழ் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக காலம் காலமாக நாம் போராடி வந்த நிலையில், 2018இல் எமது போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.

இது நகரசபைக்கு சொந்தமான காணியாகும். 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அமைச்சர்களான சந்திரசேகர் மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பாடசாலையை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்த நடவடிக்கைகளும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டன. எனினும் 2018இல் அப்போதைய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலையீட்டின் கீழ் இந்தக் காணி பாடசாலைக்காக என ஒதுக்கப்பட்டது.

நகரசபையின் கீழ் காணப்பட்ட குறித்த காணி மாகாண கல்வி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு, பிரதேசசபை அலுவலகத்தின் ஊடாக வலய கல்வி திணைக்களத்து வழங்கப்பட்டது. காணி ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதில் பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை அடிப்படையாகக் கொண்ட இனவாத பிரச்சினைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் நிதி பற்றாக்குறையெனக் கூறி பாடசாலை நிர்மாணப்பணிகள் காலம் தாழ்த்தப்பட்டன.

எனினும் நாம் எமது சொந்த நிதியை வழங்குவதாகக் கூறிய பின்னர், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் சில தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதன் பின்னரான கொவிட் பரவல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மொழி ரீதியாக பாடசாலைகளை அமைப்பதில்லை என்பது தமது கொள்கையெனக் கூறி, இந்தக் காணியை மீள கையகப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த வருடமாக இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், இந்த காணியை மீள கையகப்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. நகரசபைத் தலைவர் கூட்டம் நிறைவடைய முன்னரே அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இந்த காணியை அரசாங்கம் மீள சுவீகரிப்பதற்கான யோசனையை முன்வைத்து, அனுமதியை பெற்றனர். எனினும் நீண்ட விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக இந்த யோசனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான வீதிக்கு அருகிலுள்ள காணியாகும். ஆனால் அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு திட்டமும் இங்கு முன்னெடுப்பதற்கு முன்மொழியப்படவில்லை. காணியை கையகப்படுத்திய பின்னர் ஏதேனும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே திட்டமிடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய இந்த காணி மீளப் பெறப்பட்டால் வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான எமது 25 ஆண்டு கால போராட்டம் தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடைவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றார்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்