தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது

கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கடற்றொழிலாளர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும். இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.

அதை விடுத்து சக கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற கடற்றொழிலாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற கடற்றொழிலாளர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும். தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.

குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் தான் கண்டிக்கலாம். அதற்கான தீர்ப்பு வழங்கலாம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரங்கள் கவனமாகவும், கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் பார்க்கும்போது ஒரு கடற்றொழிலாளர் அவர் என்ன குற்றம் செய்திருக்கலாம்? ஆனால் அதை நீதிமன்றங்கள் தான் கையாள வேண்டும். அதற்கான விசாரணை செய்து முறையான தண்டனைகள் அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

retd-judge-kirubakaran-2026-04-28-17-07-51

“என் கட்சி தோற்றால் த*ற்கொ*லை செய்வேன் என்பதா?” – சமூக வலைதளப் பதிவுகளால் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கடும் வேதனை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில கட்சியினர் பதிவிடும் கருத்துக்கள்

768-512-19605272-thumbnail-16x9-tamili

“4-ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும்” – செங்கோட்டையன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பதிலடி!

April 29, 2026

திண்டுக்கல்: “தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறிய

1c7086d0-00b2-11ef-8fbb-975a5f7e9af9.png

கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் இன்று மதுரை புறப்படுகிறார் அழகர்!

April 29, 2026

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் இன்று தொடங்குகிறது. சைவ,

puthiyathalaimurai_2026-04-24_g3n952sd_se-4

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளின் தலைவிதியைத் தீர்மானிக்க 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம்

namal

இது சைபர் தாக்குதல் அல்ல, போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி” – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

April 29, 2026

ஏப்ரல் 29, 2026 அரசாங்கக் கணக்குடன் தொடர்புடைய அண்மைக்கால நிதி மோசடியானது, உண்மையான சைபர் தாக்குதல் (Cyber attack) மூலம்

humanright comm

வடகிழக்கு பெண் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர் – மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

April 29, 2026

ஏப்ரல் 29, 2026 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் (HR defenders)

683656357_122289662186194641_742273206620209422_n

டேட்டிங் ஆப் மூலம் சந்திப்பு: ஆயுத முனையில் கொள்ளையடித்த நபரைத் தேடும் கால்கரி பொலிஸார்

April 29, 2026

ஆயுத முனையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கண்டறிய கால்கரி (Calgary) பொலிஸார் பொதுமக்களின் உதவியைக்

f 35

88 எஃப்-35 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை கனடா மீள்பரிசீலனை செய்கிறது

April 29, 2026

88 எஃப்-35 (F-35) போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை கனடா தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருவதாகவும், இதற்கு மாற்றாக

684148000_122289679532194641_663390058442866895_n

லம்ப்டன் கல்லூரி மதுபான விடுதி துப்பாக்கிச் சூடு: கொலைச் சந்தேகநபர் கைது

April 29, 2026

லம்ப்டன் கல்லூரிக்கு (Lambton College) அருகிலுள்ள வளாக மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு

canada police251

பிக்கரிங் வணிக வளாகத்தில் திருட்டு மற்றும் கத்தியால் மிரட்டிய பிராம்ப்டன் இளைஞர் கைது

April 29, 2026

பிக்கரிங் (Pickering) பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த 28 வயது

carney

வசந்த கால பொருளாதார அறிவிப்பில் ‘நல்ல செய்திகள்’ வரும்: மார்க் கார்னி உறுதி

April 29, 2026

கனடா அரசாங்கம் தனது வசந்த கால பொருளாதார அறிக்கையை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், நாட்டின் நிதி நிலைமை குறித்து

679747034_122289804662194641_1967856837116012061_n

கோபர்க் நெடுஞ்சாலை 401 விபத்தில் ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரி பலி

April 29, 2026

கோபர்க் (Cobourg) பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401-இல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி