தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று(14.3.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடனும் முன்னிலையான செயற்பாட்டை நோக்கி நகர்ந்து வருகின்றோம்.

தற்போது தமிழ் மக்கள் தலைமைத்துவம் அற்று மோசமான நிலையில் வாழ்கின்றனர். எந்த ஒரு தமிழ்கட்சிகளும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையினை தெரிவு செய்யவில்லை.

தொடர்ச்சியாக பிழையான பாதையில் அந்த கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளில் சுயநலம் குடிகொண்டுள்ளது. பொது நலம் இல்லாமல் போய்விட்டது.

தமிழ்கட்சிகளுக்கு போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு விட்டது. 2009 போர் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக தமிழர் விடுதலை கூட்டணி அதற்கான இடைவெளியை நிரப்பும் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளரத்த தொடங்கியதோ அன்று தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்து விட்டது. நேரடியாக தந்தை செல்வாவுடனும் ஜிஜி பொன்னம்பலத்துடனும் இருந்த ஒரே தலைவர் ஆனந்தசங்கரியே அவரே இந்த கட்சியை கட்டமைத்து வருகின்றார்.

பழையவர்களை நாங்கள் மறக்ககூடாது. பழையவர்களின் கடந்த கால அனுபவங்களும் எங்களது புத்திசாலித்தனமுமே இந்த தேசத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்.

எனவே எங்களை தமிழ் மக்கள் நம்புங்கள். இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள். என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, கட்சியின் வன்னிமாவட்ட கிளையின் தலைவர் உதயன், செயலாளர் திவா,இளைஞரணி செயலாளர் பத்மகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை கூட்டணியின் மத்திய குழுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

sas

அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு!

March 15, 2026

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர்

era

சஜித் பிரேமதாசவின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன!

March 15, 2026

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக

Gyne

ஏப்ரல் 23ஆம் திகதி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

March 15, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர்

lanka

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

March 15, 2026

ரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக்

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

வீதி விபத்தில் இளைஞன் பலி

March 15, 2026

கேகாலை- துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(14.3.2026) இடம்பெற்றுள்ளது. அபேபுஸ்ஸ திசையிலிருந்து

un

தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

March 15, 2026

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக

Chami

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

March 15, 2026

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்

arr

சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது

March 15, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்

Ele

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

March 15, 2026

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு

4

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

March 15, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை

Harini-amarasooriya

ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைகின்றமை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது – ஹரிணி

March 15, 2026

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப்

gov

2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!

March 15, 2026

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல்