டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது

டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கைகளின் போது, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் இலங்கை குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்கள் டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளாலேயே வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் ஈரானில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி இலங்கைக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைப்பது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தெரியவந்துள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களைக் கைது செய்ய அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது ஈரான் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், ஈரானிய குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணும் நபர்களைக் கண்டறிய அந்த நாடுகள் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதன் விளைவாக, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் படுவத்தே சாமர, மோதர நிபுன, பரேவி சுதா உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியான போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் மத்திய கிழக்கு நாடுகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகள் காரணமாக, தற்போது பல குற்றவாளிகள் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘ராஜூ’ என்பவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் இன்று (17) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ‘கரந்தெனிய சுத்தா’வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 30 வயதுடைய பெண் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 99 கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரை கரந்தெனிய சுத்தாவே கொலை செய்துள்ள நிலையில், அதன்பின்னர் அப்பெண் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கரந்தெனிய சுத்தாவுடன் வீடியோ அழைப்பில் (Video Call) பேசும் புகைப்படமும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது தாயாரும் சகோதரரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலதின் மேற்பார்வையில், காலி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ. புஷ்பகுமாரவின் வழிகாட்டலில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Prive bus

வயிற்றில் போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பேருந்து நடத்துனர் மரணம்

June 11, 2026

தங்காலை மற்றும் மாகும்புர இடையே தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) பயணிக்கும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பணிபுரிந்த

722605460_1539455320926522_1841709349141582383_n

பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும். – யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி

June 11, 2026

ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இலங்கை

El ni

காலநிலை மாற்றம்; எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்தா?

June 11, 2026

எதிர்பார்க்கப்படும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம், கணிக்கப்பட்டதைப் போலவே இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், குடிநீர் தேவையைப் பூர்த்தி

naina

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

June 11, 2026

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்

parliment

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை- பிரதி சுகாதார அமைச்சர்

June 11, 2026

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி

720571922_3539434372901910_1636371394617666931_n

அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல”

June 11, 2026

களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி

Walk-1

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 11, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

makkas

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

June 11, 2026

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு

sun

தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

June 11, 2026

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட

kaj

மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

June 11, 2026

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர்

KXQH3VQHQ565YO7OI3PWRRR3JU

ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

June 11, 2026

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக்

trump june 26

கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

June 11, 2026

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA /