டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிரந்தரமாக நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல மற்றும் மேற்பார்வையிடுதல் ஆகிய பணிகள் இந்தச் செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலின் போது, ‘Rebuilding Sri Lanka’ செயலணியின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு இதுவரை கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் மற்றும் செயலணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கிடைக்கப்பெறும் என இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.

தற்போதும் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிக விரைவாக நிரந்தர தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருப்பது நீண்டகாலப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இணைந்திருந்ததுடன், அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு உள்ளிட்டோர் மற்றும் குழுவின் சக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மாவடிப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 7, 2026

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று

in

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

March 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.

coo

சமூக வலைத்தள விற்பனை முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞர்

March 7, 2026

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

urum

உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

March 7, 2026

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள்

mug

டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

March 7, 2026

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட

aswe

அஸ்வெசும திட்டம் – வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

March 7, 2026

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப்

jap

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

March 7, 2026

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர்

hon

வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

March 7, 2026

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால்

fffff

மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

March 7, 2026

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள்

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்