‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார்.

இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

au

“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி

December 7, 2025

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக”

bst

சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!

December 7, 2025

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ​ சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள்

cir

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

December 7, 2025

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு

photo-collage.png (5)

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன

December 7, 2025

அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில்

crim

67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி

December 7, 2025

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்

ja hind

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

December 7, 2025

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட

1751730278-rice-hjg-L

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

December 7, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை

sama

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

December 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

tu

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

December 7, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான

Education

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

December 7, 2025

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில்

juvan

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

December 7, 2025

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

ditva_4

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

December 7, 2025

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என