சுங்கத்தால் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை கட்டமைப்புசார் சிக்கல்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதை காண்பிக்கின்றது – அம்பிகா சற்குணநாதன்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்படாமை, அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படாமை, அரச நிறுவனங்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உட்படாமை, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குத் தொடர்தல் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கட்டமைப்புசார் சிக்கல்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காண்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவில் செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளடங்கலாகப் பலரும் தமது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திவரும் நிலையில். இதுபற்றிய தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் அதில் மேலும் கூறியிருப்பதாவது:

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது பல்வேறு கட்டமைப்புசார் சிக்கல்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காண்பிக்கிறது.

முதலாவதாக தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அரசாங்கம் மாற்றுக்கருத்துக்களை நசுக்கவும், கருத்துச்சுதந்திரத்தை தடைசெய்யவும் இந்தப் பிரிவை ஒரு பொதுவான கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அதேபோன்று அரச கட்டமைப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடனோ அல்லது உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியோ இயங்குவதில்லை. நூல்களை விடுவிக்கக்கூடாது எனத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் மற்றும் செயன்முறைகளை சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன வெளிப்படுத்தவேண்டும். அந்த நூல்களை மீளாய்வு செய்தவர்கள் மற்றும் அவற்றைத் தடுத்துவைப்பதற்குப் பரிந்துரைத்தவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை தீபச்செல்வனுக்கு உண்டு.

அத்தோடு அரசாங்கம் மாறினாலும் அரச நிறுவனங்கள், குறிப்பாகப் பாதுகாப்புத்துறையானது முன்னைய அரசாங்கங்களின்கீழ் எவ்வாறு இயங்கியதோ அவ்வாறே தற்போதும் இயங்குகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய முறையான மற்றும் தெளிவான அறிவுறுத்தல்களை அரசாங்கம் சகல அரச நிறுவனங்களுக்கும் வழங்கவேண்டும்.

மேலும் தற்போதைய அரசாங்கம் தட்டிக்கேட்காது என்ற நம்பிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஏதேச்சதிகாரப்போக்குடன் செயற்படுவதானது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்

Electricity Tariff-710053

மின்சாரக் கட்டணத் திருத்தம்: மே 9 ஆம் தேதி இறுதி முடிவு

April 29, 2026

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் தேதி

Nalinda Jayatissa Cabinet Meet-790605

$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

April 29, 2026

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி

(c)PragMatrix

புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

April 29, 2026

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக

1200-675-26574451-thumbnail-16x9-murder-case

நங்கநல்லூரில் பயங்கரம்: மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு கணவன் த*ற்கொ*லை!

April 29, 2026

சென்னை: ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகத் தொழில் அதிபரான மனைவியைக் கணவன் வெட்டிக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட

screenshot76476-1683464956

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு – கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 700+ பேருந்துகள் இயக்கம்!

April 29, 2026

சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்

1200-675-26438077-thumbnail-16x9-alangulam (2)

விவசாயி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஐகோர்ட் கிளையில் தென்காசி சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்!

April 29, 2026

மதுரை: தென்காசி அருகே விவசாயி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சப்-கலெக்டர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி

1777353517-4676

“திருச்செந்தூர் டூ ஷீரடி” – முருகன் தரிசனத்தைத் தொடர்ந்து இன்று சாய் பாபாவைத் தரிசிக்கிறார் விஜய்!

April 29, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்