சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது இலங்கை

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்:

“சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ala

கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்!

August 26, 2026

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு

bima

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் அச்சமின்றி நாடு திரும்பலாம்

August 26, 2026

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்

hars

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை ஒருபோதும் அரசாங்கம் நிறுத்தாது – அமைச்சர் ஹர்ஷன

August 26, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினையாகக் காணப்படுகிறது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ford12

அமெரிக்காவிற்கான மின்சார விநியோகத்தை நிறுத்துவதில் ஒன்டாரியோ தன்னிச்சையாகச் செயல்படாது: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு ஒன்டாரியோ அளிக்கும் பதிலடியில் “எல்லா வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன” (everything’s on

hur

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!

August 26, 2026

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக

socfd

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

August 26, 2026

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல்

doug-ford-ontario-premiere-february-7-2023

டிரம்ப் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் ‘உலகம் முழுவதும் எதிரொலித்தன’: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்த வார தொடக்கத்தில் தான் நடத்திய தனிப்பட்ட விமர்சனங்களில் எல்லை மீறிச் சென்றுவிட்டதாகத்

canada export

எங்கள் கைகளில் பல வாய்ப்புகள் உள்ளன’: ஜோலி

August 26, 2026

அமெரிக்காவைக் கையாள்வதற்கு கனடாவிடம் இன்னும் பல வழிமுறைகள்/வாய்ப்புகள் இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) தெரிவித்துள்ளார்.

trump

கனடாவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது’: டிரம்ப்

August 26, 2026

அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த சில நாட்களிலேயே, “கனடா இனிமேலும் இப்படிச் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப்

DNC4U5DD3VAOPMURZP5EIMAUFM

நேபாளம் மற்றும் சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: குறைந்தது 98 பேர் பலி; 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை

August 26, 2026

உடின் துங்கா, நேபாளம் — நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்