இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் அச்சமின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (26) அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது:

“யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாகக் கைதுச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கியமான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.”

நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும். அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்புப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 2009 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 811 ஏக்கர் அரச காணிகளும் 21,942 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாசவிளான் வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காணிகளில் பாதுகாப்புத் தேவைகளுக்கு அத்தியாவசியமான காணிகளைத் தவிர்ந்த ஏனைய காணிகளை மீள வழங்குவது தொடர்பிலும், நிரந்தரமாகத் தேவைப்படும் காணிகளுக்குப் பொருத்தமான தற்போதைய மதிப்பின்படி இழப்பீட்டை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்குத் தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

ala

கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்!

August 26, 2026

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு

bima

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் அச்சமின்றி நாடு திரும்பலாம்

August 26, 2026

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்

hars

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை ஒருபோதும் அரசாங்கம் நிறுத்தாது – அமைச்சர் ஹர்ஷன

August 26, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினையாகக் காணப்படுகிறது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ford12

அமெரிக்காவிற்கான மின்சார விநியோகத்தை நிறுத்துவதில் ஒன்டாரியோ தன்னிச்சையாகச் செயல்படாது: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு ஒன்டாரியோ அளிக்கும் பதிலடியில் “எல்லா வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன” (everything’s on

hur

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!

August 26, 2026

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக

socfd

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

August 26, 2026

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல்

doug-ford-ontario-premiere-february-7-2023

டிரம்ப் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் ‘உலகம் முழுவதும் எதிரொலித்தன’: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்த வார தொடக்கத்தில் தான் நடத்திய தனிப்பட்ட விமர்சனங்களில் எல்லை மீறிச் சென்றுவிட்டதாகத்

canada export

எங்கள் கைகளில் பல வாய்ப்புகள் உள்ளன’: ஜோலி

August 26, 2026

அமெரிக்காவைக் கையாள்வதற்கு கனடாவிடம் இன்னும் பல வழிமுறைகள்/வாய்ப்புகள் இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) தெரிவித்துள்ளார்.

trump

கனடாவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது’: டிரம்ப்

August 26, 2026

அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த சில நாட்களிலேயே, “கனடா இனிமேலும் இப்படிச் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப்

DNC4U5DD3VAOPMURZP5EIMAUFM

நேபாளம் மற்றும் சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: குறைந்தது 98 பேர் பலி; 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை

August 26, 2026

உடின் துங்கா, நேபாளம் — நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்