சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும் என்றும், இதில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாகச் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை என சொல்லப்படும் இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) விதிகளின்படியே இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்றும், மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடல்களின் இதயம் இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம் என்ற தலைப்பிலான அமர்வில் பேசிய அவர், இப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வரவேற்றார் இந்தியாவின் வளங்கள் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இப்பிராந்தியம் பெரும் முன்னேற்றம் அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரான் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரத்தை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே கையாண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற ரய்சினா கலந்துரையாடலில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் இலங்கை எந்தவொரு பக்கமும் சாராது என்றும், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) சட்டகத்திற்குள்ளேயே தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், IORA அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஒரு பெரிய அண்டை நாடாக இந்தியாவிடம் உள்ள மனித வளம் மற்றும் இதர வளங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

seeni

காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

March 8, 2026

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில

arrest

போதைப்பொருளுடன் இருவர் கைது!

March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு

m

மகரகமவில் பாரிய தீவிபத்து!

March 8, 2026

மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள்

wate

லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு!

March 8, 2026

கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) காலை

no

நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

March 8, 2026

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

shi

தொடர் தாக்குதல்களில் ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

March 8, 2026

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன

anu

“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

March 8, 2026

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில்,

acc

நவாலியில் தனியார் பேருந்தும் கன்டர் ரக வாகனமும் மோதி விபத்து 

March 8, 2026

யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது

nal

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் குறித்து சபையில் கடும் வாக்குவாதம்

March 8, 2026

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு

hi

அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

March 8, 2026

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ்,

viji

சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

March 8, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும்

fue

எரிபொருள் கையிருப்பு; வெளியான முக்கிய தகவல்

March 8, 2026

தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்