குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றது
அதாவது அங்குள்ள ஆதி ஐயனார் கோவிலை சிதைத்து சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அங்கு சைவ கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தொல்லியல் திணைக்களம் எழுத்தில் சொல்லியிருக்கின்றது
அதே போல குறித்த நிலப்பரப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த தலத்திற்கான சான்றுகளைக் கொண்ட இடம் எனவும் தங்கள் கடிதத்தில் தொல்லியல் திணைக்களம் பதிவு செய்து இருக்கின்றது
விசேடமாக பிக்குகளால் சேதமாக்கப்பட்டுள்ள சைவ ஆலயத்தை புனரமைக்க சிந்திப்பது அல்லது புதிதாக உருவாக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எழுத்தில் அறிவித்திருக்கின்றார்கள்