40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர்கள் தன்னைகுற்றவாளி என்ற எண்ணத்துடன் வழக்குத் தொடர்ந்ததாகவும்இ தனது சாசன உரிமைகளை மீறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீதித்துறையில் இழுபறியாக இருந்து வரும், சஸ்காட்செவனில் நடந்த ஒரு மாபெரும் குடிவரவு மோசடி செய்தியில் சமீபத்தில் ஏற்பட்ட திருப்பம் இதுவாகும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
2022-ல், இந்தியாவிலிருந்து குடியேற விரும்பும் நபர்களுக்குப் போலி வேலை வாய்ப்புக் கடிதங்களை உருவாக்கி வழங்கிய ஒரு குடிவரவு மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக, சிங் குற்றவாளி என தீர்ப்G வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், சிங்கைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துச் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, நீதிபதி முழு வழக்கையும் தள்ளுபடி செய்து, சிங் விடுவிக்கப்பட அனுமதித்தார்.
சிங்கைக் குற்றமற்றவர் என நிரூபிக்கக்கூடிய முக்கியமான தகவல்களை சிபிஎஸ்ஏ (CBSA) மற்றும் அரசுத் தரப்பு மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, விசாரணையை ரத்து செய்யுமாறு அவரது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரினர். மேலும், சிபிஎஸ்ஏ-வின் ஒரு முக்கிய புலனாய்வாளர் சாட்சிகளை மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
அதன் விளைவாக ஏற்பட்ட இந்த ரத்து விசாரணை, முன்னெப்போதும் இல்லாத தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது — சிபிஎஸ்ஏ அதிகாரிகளின் தொடர்ச்சியான தவறான முடிவுகள், அவர்களின் இரண்டு ஆண்டு கால குடிவரவு மோசடி விசாரணையையே முறியடித்தன.
2025, ஜூலை 23 அன்று வழங்கிய தனது தீர்ப்பில் சிங்கிற்கு எதிரான குற்றவியல் வழக்கில் நீதிபதி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார்.
சிங் குற்றவாளி என்பதில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று தொடர்ந்து நம்பியபோதிலும், இந்த நடவடிக்கையை எடுத்ததாக நீதிபதி கூறினார். சிபிஎஸ்ஏ-வின் நடத்தை “சமூகத்தின் நேர்மை மற்றும் கண்ணிய உணர்வைப் புண்படுத்துகிறது” என்பதால், இந்த முடிவை எடுக்கத் தான் நிர்பந்திக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது சிங், சிவில் நீதிமன்றத்தில் கனேடிய அரசிடமிருந்து இழப்பீடும், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில் கனடாவில் நிரந்தரக் குடியுரிமையும் கோரி வருகிறார்.
அவருடைய வழக்கறிஞர்களில் ஒருவரான தவெங்வா ருன்யோவா, சிலர் இந்த வழக்கைப் பார்த்து, சிங் ஒரு தொழில்நுட்பக் காரணத்தால் தப்பிவிட்டார் என்று நினைக்கக்கூடும் என்றாலும், அவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
நீண்டகால குடிவரவு மோசடி விசாரணைக்குப் பிறகு, சிபிஎஸ்ஏ அதிகாரிகள் 2018 டிசம்பரில் சிங்கை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.