கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையில் ‘வா வாத்தியார்’ வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் உள்ளனர்.
கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையில் அவருடைய நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ‘வா வாத்தியார்’ வெளியீட்டுக்காக காத்திருப்பில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ படத்தினை கடந்த 5 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போனது. இதனையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ‘வா வாத்தியார்’ தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து அவர் வாங்கிய கடனை திருப்பியளிக்கும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை ரிலீஸ் தடை விதிக்ககோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த கடனை வட்டியுடன் சேர்ந்து ரூ. 21 கோடியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திருப்பியளிக்க வேண்டும்.
அதுவரை ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
‘வா வாத்தியார்’ படத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்த மாதம் ‘வா வாத்தியார்’ வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், சூது கவ்வும் போன்ற ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி டைரக்ஷனில் ‘வா வாத்தியார்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். அத்துடன் சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையில் ‘வா வாத்தியார்’ படத்துடைய பாடல்கள், டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளன. எம்ஜிஆரை மையப்படுத்தி ஃபேண்டஸி கலந்த ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. இதனால் டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு ‘வா வாத்தியார்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சி செய்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் இப்படத்தின் வெளியீடு இந்த மாதம் இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.