கனடா – மிசிசாகாவில் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம்; 12 மணி நேரத்தில் டிரெய்லர் மீட்பு!

கனடாவின்மிசிசாகா (Mississauga) பகுதியில் உள்ள கே.ரி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் (KT Group of Companies) ஏப்ரல் 16 வியாழக்கிழமை அதிகாலை திட்டமிட்ட கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வியாழன் ( ஏப்ரல் 16) நள்ளிரவு சுமார் 12:50 (கனேடிய நேரம்) மணியளவில், அடையாளம் தெரியாத குழுவினர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி டிரெய்லரை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த டிரெய்லர் இரும்பு பூட்டுடன் பாதுகாப்பாக பூட்டப்பட்டிருந்தபோதிலும், குற்றவாளிகள் இரும்பு வெட்டும் இயந்திரத்தை பயன்படுத்தி பூட்டை வெட்டி உடைத்து, டிரெய்லரை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் முழுமையான பாதுகாப்பு சீருடைகளை(சேப்டி யூனிபார்ம்களை) அணிந்து இருந்ததால், இது மிகவும் திட்டமிட்ட முறையில் நடைபெற்ற கொள்ளை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்களில், குற்றவாளிகள் தொழில்முறை முறையில் செயல்பட்டது தெளிவாகக் காணப்படுகிறது. அது மாத்திரமன்றி இது முதல் சம்பவம் அல்ல. கடந்த ஆண்டும் இதே இடத்தில் இதே போன்ற கொள்ளை முயற்சி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது நிறுவன உரிமையாளர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை தடுத்து நிறுத்தியிருந்தார். தற்போது இது இரண்டாவது முயற்சியாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெறும் 12 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட டிரெய்லர் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தேடுதல் பணியில் இணைந்து செயல்பட்டனர். பின்னர்,  திருடப் பட்ட டிரெய்லர் வோன் நகரின் வுட்பிரிட்ஜ் (Woodbridge) பகுதி வாகனத் தரிப்பிடத்தில்  (Parking) மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை