கண்காணிப்பு விமானம் மலை மீது மோதியது; 10 பேர் உயிரிழப்பு; இந்தோனேசியாவில் சம்பவம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரிலிருந்து தெற்கு சுலவாசி மாகாணத்திற்கான கண்காணிப்பு பணிக்காக புறப்பட்ட சிறிய ரக விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17) புறப்பட்ட இந்த ATR 42-500 வகை விமானம், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் மற்றும் பாங்க்கெப் மாவட்டங்களுக்கிடையிலான வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 1.30 மணியளவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்த நிலையிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், பண்டிமுருங்–புலுசராங் தேசிய பூங்காவிற்குட்பட்ட புலுசராங் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.

மீட்பு குழுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, விமானத்தில் பயணம் செய்திருந்த ஏழு விமானக் குழு உறுப்பினர்கள் மற்றும் இந்தோனேசிய கடல் மற்றும் மீன்வள அமைச்சின் மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 10 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு சடலங்கள் ஜனவரி 23 ஆம் திகதி அதிகாலை மீட்கப்பட்டதாக தெற்கு சுலவாசி மீட்பு அமைப்பின் அதிகாரி ஆண்டி சுல்தான் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் மலைப்பாங்கானதும் அடர்ந்த காடுகளைக் கொண்டதும் என்பதால், மீட்பு பணிகள் கடினமாக இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக விமானத்தின் சிதைவுகள் மலை சரிவுகளில் சிதறிக்கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனிடையே, விமானத்தின் “பிளைட் டேட்டா ரெக்கோர்டர்” (கருப்பு பெட்டி) விபத்திடத்திற்கு அருகில், மலை உச்சியிலிருந்து சுமார் 150 மீற்றர் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவி தற்போது தேடுதல் மற்றும் மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விமானம், மீன்பிடி பகுதிகளை கண்காணிக்கும் வான்வழி பணிக்காக இந்தோனேசிய கடல் மற்றும் மீன்வள அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விமானம் முறையான பராமரிப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னரே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (KNKT) மற்றும் விமான போக்குவரத்து துறை இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தோனேசியாவில் ATR 42 வகை விமானம் தொடர்பான உயிரிழப்புகளுடன் கூடிய விபத்து இது முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு பப்புவாவில் ATR 42-300 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்