கடந்த ஆண்டில் 2025 இல் 110 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

கடந்த 2025 ஆம் ஆண்டில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் மூலம் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 110 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையே 147 பில்லியன் ரூபாவாகும் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குப் பெருமளவு பணம் இழக்கப்படுவதாகவும், இந்த வருமானம் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது எதிர்காலப் பயணத்திற்கோ எவ்விதத்திலும் பங்களிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டைச் சூழ்ந்துள்ள இந்தப் பயங்கரமான போதைப்பொருள் ஆபத்தில் இருந்து சமூகத்தையும் குழந்தைகளையும் பாதுகாப்பது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார். இதன் காரணமாக நாட்டின் பல இளம் உயிர்கள் அகால மரணமடைந்து நாட்டுக்கு இழக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரவி செனவிரத்ன:

“நமது நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு பயங்கரமான ஆபத்து உள்ளது. அதுதான் போதைப்பொருள். 2025 இல் பொலிஸாரும் இராணுவமும் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் நிதிப் பெறுமதி 110 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். அத்துடன் நான் உங்களுக்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும், 2025 ஆம் ஆண்டில் நான் சேவை செய்யும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிறுவனங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையே 147 பில்லியன் ரூபாவாகும். எனவே, ஏறக்குறைய அதே அளவிலான பணம் இந்த போதைப்பொருள் காரணமாக நமது நாட்டுக்கு இழக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 110 பில்லியன் ரூபாவும் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, இது நாட்டின் அபிவிருத்திக்கோ, நாட்டின் எதிர்காலப் பயணத்திற்கோ பங்களிக்கக்கூடிய ஒன்றல்ல. எனவே, இந்த போதைப்பொருள் அரக்கனிடமிருந்து உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.”

sri

தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்