ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலை பட்டப்படிப்பு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண முடிகிறது. குறிப்பாக, 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2026 ஜனவரியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 8.8 சதவீத வளர்ச்சியையும், கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி 5.9 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த சாதகமான மாற்றத்திற்கு வாகன இறக்குமதி செலவுகள் குறைந்தமை ஒரு முக்கிய காரணமாகும்.

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு குறையும். இதனால் இறக்குமதி செலவுகள் குறைந்து வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியும். உலகப் பொருளாதாரத்தில் இலங்கை படிப்படியாக வலுவடைந்து வருவதை இது காட்டுகிறது.

சேவைத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட, உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருமானமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும். உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் குறைய வாய்ப்புள்ள போதிலும், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வாகன இறக்குமதி செலவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முடியும்.

இந்த நிலை தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையின் செலுத்தல் மீதியில் சாதகமான வருமானத்தை பேண முடியும் என்பதுடன், இது உலகப் பொருளாதார அரங்கில் இலங்கையை ஒரு சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றோம் என்றார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்